/* */

ஐடிஐ முடித்தோருக்கு மத்திய ரயில்வேயில் 2,422 காலிப் பணியிடங்கள்

ஐடிஐ முடித்தோருக்கு மத்திய ரயில்வேயில் 2,422 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஐடிஐ முடித்தோருக்கு மத்திய ரயில்வேயில் 2,422 காலிப் பணியிடங்கள்
X

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய ரயில்வே மண்டலத்தில் 2,422 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்த தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

அதன்படி, மும்பை- 1401, புசாவல்- 418, புனே- 152, நாக்பூர்-114, சோலாப்பூர்- 79 என மொத்தம் 2,422 காலிப்பணியிடங்கள் அடங்கும்.

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சியுடன் கூடிய ஐடிஐ படிப்பை முடித்தவர்கள் இந்தப் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: இந்தியாவில் உள்ள இந்த ரயில்வே பணிகளுக்கு 15 வயது முதல் 24 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

UR/OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும்.

SC/ST/பெண்கள்/PWD பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

ஆன்லைன் விண்ணப்பங்கள் 17 ஜனவரி 2022 முதல் 16 பிப்ரவரி 2022 க்கு முன் https://rrccr.com/TradeApp/Login என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணபிக்கலாம். மேலும் விபரங்களுக்கு https://rrccr.com/PDF-Files/Act_Appr_21-22/Act_Appr_2021-22.pdf என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Updated On: 18 Jan 2022 2:30 AM GMT

Related News