Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை: அரசின் புதிய அறிவிப்பு
தமிழகத்தில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் தவிர, மற்ற வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை நீட்டித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் பெருந்தொற்று பரவலால், ஊரடங்கு நீட்டிக்கபப்ட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை, விடுமுறை அறிவித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில்1-9 வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளுக்கு, ஆன்லன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மூலம் மாணவர்கள், கல்வியை தொடரலாம்.
அதே நேரம், பொதுத் தேர்வு நடைபெறும் 10, 11 மற்றும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று, தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
இதேபோல், தமிழகத்தில் அனைத்து பிஇ, கலை - அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.