தற்காலிக ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பம்
Veacher Vacancy 2022- அரசு பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியராக பணியாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
HIGHLIGHTS
Veacher Vacancy 2022- தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் ,நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆயிரத்து 331 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000, முதுநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ 12000 வீதம் 10 மாதங்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன் மூலம் இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கும், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
காலி பணியிடங்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் பள்ளி வாரியாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இன்று முதல் 6ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் இடம் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகம் மின்னஞ்சல் வாயிலாக சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை அனைத்தையும் 6-ம் தேதி இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2