/* */

நவ. 1இல் பள்ளி திறப்பு இல்லை: தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு

தமிழகத்தில் , மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள், வரும் 1ம் தேதி திறக்கப்படாது என்று, தமிழக அரசு திடீரென அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

நவ. 1இல் பள்ளி திறப்பு இல்லை: தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு
X

கோப்பு படம்

கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளதால், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 1-இல் இருந்து, 9-ம் வகுப்பு முதல், 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறன.

அதேபோல், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடைபெறும் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து, தற்போது பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களுடன், நவம்பர் 1 முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புக்கு மாறாக, தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது என, அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என, அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 23 Oct 2021 8:40 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  2. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகள் அமைப்பு
  10. திருவண்ணாமலை
    மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...