/* */

எளிய முறையில் அலகிட்டு வாய்பாடு எழுதுதல்..

Alagitu Vaipadu For Thirukural in Tamil-எளிய முறையில் அலகிட்டு வாய்பாடு எழுதுதல் பற்றி தெரிந்துகொள்வோம்.

HIGHLIGHTS

எளிய முறையில் அலகிட்டு வாய்பாடு எழுதுதல்..
X

பைல் படம்

Alagitu Vaipadu For Thirukural in Tamil-அலகிட்டு வாய்பாடு

அசை பிரிக்கும் முறைகள் :

நேரசை

தனிக்குறில் - க

தனிக்குறில் ஒற்று - கல்

தனிநெடில் - கா

தனி நெடில் ஒற்று -கால்

நிரையசை

இரு குறில் - கட

இரு குறில் ஒற்று - கடல்

குறில் நெடில் இணைந்து - விழா

குறில் நெடில் இணைந்த ஒற்று - விழார்


வாய்பாடு

ஓரசைச்சீர் : ஈற்றில் வருவது

1 .நேர் - நாள்

2 .நிரை - மலர்

3 .நேர்பு ( நேர் - நேர் ) - காசு

4 .நிரைபு ( நிரை - நேர் ) - பிறப்பு

ஈரசைச்சீர் :

1 .நேர் - நேர் - தேமா

2 . நிரை - நேர் - புளிமா

3 .நிரை - நிரை - கருவிளம்

4 .நேர்- நிரை - கூவிளம்

மூவசைச்சீர்

காய்ச்சீர்

1 . நேர்- நேர் - நேர் - தேமாங்காய்

2 . நிரை - நேர் -நேர் - புளிமாங்காய்

3. நிரை - நிரை - நேர் - கருவிளங்காய்

4 . நேர் - நிரை - நேர் - கூவிளங்காய்

இதனைப் பயன்படுத்தி நாம் எளிய முறையில் அலகிடலாம் .

வ .எண்

சீர்

அசை

வாய்பாடு

1

எப்|பொருள்

நேர்-நிரை

கூவிளம்

2

எத்|தன்|மைத்

நேர்-நேர்-நேர்

தேமாங்காய்

3

தா|யினும்

நேர்-நிரை

கூவிளம்

4

அப்|பொருள்

நேர்-நிரை

கூவிளம்

5

மெய்ப்|பொருள்

நேர்-நிரை

கூவிளம்

6

காண்|ப

நேர்-நேர்

தேமா

7

தறி|வு

நிரைபு

பிறப்பு

இக்குறள் பிறப்பு என்னும் வாய்பாட்டால் முடிவடைந்துள்ளது .

எளிய முறையில் அலகிடுதல்

சீர் பிரிக்கும் முறை :

1.முதலில் மெய்யெழுத்துகளைப் | பிரிக்கவும் .

2.மெய்யெழுத்தோடு 1 எழுத்து இருந்தால் (குறில் அல்லது நெடில்) அப்படியே விடவும் .

3.மெய்யெழுத்தோடு 2 எழுத்து இருப்பின் குறில் எனில் விட்டுவிடவும்.

நெடில் |எனில் பிரிக்கவும் .

4.மெய்யெழுத்து இல்லாமல் 2 ,3 எழுத்து இருப்பின் இருகுறில் | பிரிக்கவும் . குறி்ல் நெடில் இணைத்து,| பிரிக்கவும்.

குறில் எழுத்து- நெடில் எழுத்து அறிதல்

1.அ,இ,உ,எ,ஒ-இந்த வரிசை எழுத்துகள் குறில் எழுத்துகள் .

2.ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ-நெடில்அதாவது (தா,தீ,தூ,தே,தோ,தௌ)இது போன்ற துணை எழுத்துகள் உடையவை நெடில் எழுத்துகள் ஆகும் .

அசை பிரித்த பின்னர் எழுத்துகளுக்கு(குறில்,நெடில்) எண்கள் இடுக.

குறில்-1

நெடில் -1

மெய்யெழுத்து -0

அசை எழுதுதல் :

1 ,10 -நேர்

11,110 -நிரை -இவற்றைப் பயன்படுத்தி எழுதலாம் .


அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல் .

-இக்குறட்பாவினை அலகிடுக .

வ.எண்

சீர்

அசை

வாய்பாடு

1

11 | 110| 10

அரி|யவற்|றுள்

நேர்-நேர்-நேர்

தேமாங்காய்

2

10 | 10

எல்|லாம்

நேர்-நேர்

தேமா

3

11 |1

அரி|தே

நிரை-நேர்

புளிமா

4

1 1 | 1 | 10

பெரி|யா|ரைப்

நிரை-நேர்-நேர்

புளிமாங்காய்

5

1 | 10

பே|ணித்

நேர்-நேர்

தேமா

6

11 | 10

தம|ராக்

நிரை-நேர்

புளிமா

7

1 1 0

கொளல்

நிரை

மலர்

இக் குறள் மலர் என்னும் வாய்பாட்டால் முடிவடைந்துள்ளது .


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 April 2024 9:09 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  2. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  5. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்