walnut in tamil-வால்நட் சாப்பிட்டா 'வால்' முளைக்குமா..? படிச்சிப்பாருங்க, ஏராள நன்மைகள்..!

walnut in tamil-ஆங்கிலத்தில் வால்நட் என்று அழைக்கப்படும் அக்ரூட் பருப்பில் ஏராளமான ஆரோக்ய நன்மைகள் உள்ளன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
walnut in tamil-வால்நட் சாப்பிட்டா வால் முளைக்குமா..? படிச்சிப்பாருங்க, ஏராள நன்மைகள்..!
X

walnut in tamil-வால்நட் சாப்பிடும் பெண்.(கோப்பு படம்)

வால்நட் என்பதன் தமிழ் பெயர் என்ன?

walnut in tamil-Walnut அல்லது akhrot என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இது தமிழில் வாதுமைக் கொட்டை என்று அழைக்கப்படுகிறது. அது யக்லான்சு பேரினத்தில் அடங்கியுள்ள யக்லாண்டசியே குடும்பத்தைச் சேர்ந்த யக்லான்சு ரெஜியா மரத்தில் விளையும் கொட்டையாகும். இந்தக் கொட்டையானது மேலோட்டுடன் கூடியதாகும். பச்சையான கொட்டைகள் ஊறுகாய் தயாரிக்கவும் நன்கு விளைந்த கொட்டைகள் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன.


முடி வளர்ச்சி

வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதம் தாராளமாக இருப்பதால், இதை உட்கொள்வதால் முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது. இப்பருப்புகளை தொடர்ந்து உண்ணும் ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

மூளை செயல்பாடு

வால்நட் பருப்பில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரதப் பொருட்கள் இரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்வதால் மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, மூளை நன்கு செயலாக்கம் சிறப்பாக இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

walnut in tamil


மார்பகப் புற்று

தற்காலத்தில் பருவமடைந்த பெண்கள் அனைவரையும் அச்சுறுத்தும் நோயாக மார்பகப் புற்று நோய் இருக்கிறது. வால்நட்ஸ் பருப்பை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி

வால்நட் பருப்பில் இருக்கும் இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உடலை பல்வேறு வகையான நோய்த் தொற்றுகளிலிருந்து காக்கிறது. உடலில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளையும் அழிக்கின்றது.

தூக்கம்

நரம்பு பாதிப்புகளால் சிலருக்கு தூக்கமின்மை ஏற்பட்டு அவதிப்படுவார்கள். இந்த குறைபாட்டால் அவர்களுக்கு மன அழுத்தம் கூட ஏற்படலாம். அதற்குத் தீர்வாக தினமும் இரவு உணவின் போது வால்நட் பருப்பை சாப்பிட்டு வருபவர்களுக்கு இரவில் நன்கு உறக்கம் ஏற்படும். இதன் மூலம் மன அழுத்தமும் குறையும்.

சுவாச நோய்கள்

ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற நுரையீரல் நோய்கள் சுவாசப் பிரச்னைகளை உருவாக்கும். இவ்வாறான சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வால்நட் பருப்பை தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனையிலிருந்து சற்று நிவாரணம் அளிக்கும் என்று தெரிகிறது.

walnut in tamil


தோல் பராமரிப்பு

நமது உடலின் வெளிப்புற பகுதியான தோல்தான் உடலின் பாதுகாப்பு கவசம் ஆகும். அத்தகைய தோல் சிறிது ஈரப்பதத்தோடு இருப்பது ஆரோக்கியமானது. வால்நட் பருப்பு தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோலின் ஈரப்பதம் வறண்டு போகாமல் பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலமாக தோல் சுருக்கங்களும் தடுக்கப்படுகிறது.

இதயம்

உடலுக்கு உயிர் மூச்சாக விளங்குவது இதயம் ஆகும். வால்நட் பருப்பு இதயத் தசைகளை நன்கு வலுப்படுத்துகிறது. இதயத்தில் இரத்த ஓட்டத்தை சீராக இயங்கச் செய்வதற்கு வால்நட் பருப்பு பெரிதும் உதவுகிறது.

வயிறு

நாம் உண்ணும் உணவினை செரிமானம் அடையச்செய்து உடலுக்கு தேவையான சக்தியாக மாற்றும் பணியை வயிறு செய்கிறது. வால்நட் பருப்பு அதிகம் உண்பவர்களுக்கு செரிமானத்திறன் மேம்படுகிறது. அது வயிற்றில் அமிலங்களின் சுரப்பை சீராக்குகிறது. அந்த அமிலச் சுரப்பிகள் செரிமானப் பணிகளைத் தூண்டுவதில் பங்காற்றுகிறது.

walnut in tamil


வலிப்பு நோய்

பிறக்கும் போதே ஏற்படும் சில நரம்பு பாதிப்புகளால் சிலருக்கு வலிப்பு நோய் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு நிரந்தர தீர்வாக எந்த மருந்துகளும் இல்லை. வலிப்பு நோய் உள்ளவர்கள் வால்நட் பருப்பினை சாப்பிட்டு வந்தால் அது வலிப்பு நோய்க்கு நிவாரணம் அளிப்பதாக சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

பித்தப்பை

நமது உடலில் ஈரல் மற்றும் பித்தப்பை போன்ற உள்ளுறுப்புகள் உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்கின்றன. பித்தப்பையில் சிலருக்கு கற்கள் உருவாகின்றன. பித்தப்பை கற்களை கரைப்பதில் வால்நட் சிறப்பாக செயல்படுகிறது.

Updated On: 8 Feb 2023 7:38 AM GMT

Related News

Latest News

  1. திருவாடாணை
    மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
  3. குமாரபாளையம்
    ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு...
  4. திருவில்லிபுத்தூர்
    சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
  5. குமாரபாளையம்
    பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
  6. சோழவந்தான்
    பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
  8. ஈரோடு
    பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
  9. பெரம்பலூர்
    பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
  10. ஆன்மீகம்
    கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்