/* */

Parsley Seeds in Tamil-எதுக்கு பயன்படும்? பார்ப்போம் வாங்க..!

Parsley Seeds in Tamil-பார்செலி ஒரு மூலிகை வகையைச் சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். இது பசுமை நிறத்தில் காணப்படும்.

HIGHLIGHTS

Parsley Seeds in Tamil
X

Parsley Seeds in Tamil

Parsley Seeds in Tamil

இந்த பார்செலி இலைகள் மெல்லியதாக அருமையான நறுமணத்தைக் கொண்ட சோம்பின் சுவையை ஒத்து இருக்கும். சாலட், சூப் போன்றவற்றின் மேல் இதை தூவி உட்கொள்வதால் அவற்றின் சுவை அதிகரிக்கும். பார்செலியின் பயன்களை பார்ப்போமா..?

வறண்ட தோலுக்கு இதமளிக்கிறது

வறண்ட மற்றும் எரிச்சலான சரும நிலையை மருத்துவத்தில் எக்சிமா என்று கூறுவர். பெரும்பாலும் இதன் பாதிப்பால், சருமத்தில் வலி மற்றும் அரிப்பு இருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த பாதிப்பு நீடித்து நிலைக்கும் தன்மை கொண்டது. இந்த வகை சரும பாதிப்பு உடலின் எந்த ஒரு பகுதியையும் குறிப்பாக, முகம், கழுத்து, கை முட்டி, மணிக்கட்டு, முழங்கால், மற்றும் கால் மணிக்கட்டு போன்ற இடங்களைத் தாக்கலாம்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட பார்செலி , சருமத்தில் எக்சிமா பாதிப்பால் உண்டான அரிப்பு மற்றும் வீக்கத்தைப் போக்க உதவுகிறது. இந்த ,மூலிகையின் சாறு எடுத்து பாதிக்கபட்ட இடத்தில் பூசினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். பார்செலி இலை சாற்றுடன் க்ரீம் அல்லது லோஷன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

செரிமானத்திற்கு பிரான்ஸ் நாட்டவர்கள், இந்த மூலிகையைத் தங்கள் உணவின் ஒரு முக்கிய பகுதியாக மாற்றிய பெருமையைக் கொண்டவர்கள். இந்த அருமையான வாசனை பொருந்திய இலைகள், செரிமானத்திற்கு பெரிதும் உதவுவதாக பல ஆண்டுகளாக அவர்கள் நம்புகின்றனர்.

குறைந்த கலோரி மற்றும் உயர் நார்ச்சத்து கொண்ட பார்செலி, ஒரு வழக்கமான மற்றும் ஆரோக்யமான குடல் செயல்பாடுகளுக்கு சிறந்த முறையில் உதவுகிறது. மேலும் சிக்கலான குடல் இயக்கத்திற்கு சிறந்த பலன் அளிக்கிறது.

Parsley Seeds in Tamil

ஊட்டச்சத்து நிறைந்தது

இந்த மூலிகையை காய வைத்துப் பயன்படுத்தப்படும்போது, கலோரிகள் குறைந்து காணப்படுகிறது.மேலும் கால்சியம், பொட்டாசியம், ஜின்க், மாங்கனீஸ், இரும்பு, மற்றும் மெக்னீசியம் போன்றவை செறிந்து காணப்படுகிறது. செடியில் இருந்து புதிதாகப் பறிக்கப்படும் இந்த இலைகளில் ஊட்டச்சத்துகளுடன் வைட்டமின் பி 2 எனப்படும் ரிபோப்லேவின், நியாசின்- வைட்டமின் பி 3 , பைரிடாக்சின் - வைட்டமின் பி 4, மற்றும் தியாமின் - வைடமின் பி 1 என்ற ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குகிறது.

ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்தது

வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற ஆன்டி ஆக்சிடென்ட் இந்த மூலிகையில் அதிகம் உள்ளன. மேலும் பார்செலி, லூத்தின் போன்ற பாலிபீனாலிக் ப்லேவனைடு அன்டி ஆக்சிடென்ட்களைத் தன்னிடம் கொண்டுள்ளது. இது கண்பார்வை மற்றும் கண் ஆரோக்யத்திற்கு நன்மைத் தரும். மேலும் அல்சைமர் பாதிப்பைக் குறைக்கும் திறன் கொண்ட அபிஜெனின் போன்றவகளைத் தன்வசம் கொண்டுள்ளது.

உயர் இரத்த அழுத்தம்

மாரடைப்பு, வாதம், மற்றும் இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க இரத்த அழுத்த அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது நல்லது. அப்படி இரத்த அழுத்த நிலையை பராமரிக்க ஒரு பாரம்பரிய தீர்வாக பார்செலி அமைகிறது.

பார்செலி ஒரு கிருமிநாசினி

உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகள் அளிக்கும் அத்தியாவசிய எண்ணெய்களில் பார்செலி சேர்க்கப்படுகிறது. இப்படி ஒரு அத்தியாவசிய எண்ணெய். யுஜினால். இதனை கிராம்பு எண்ணெய் என்றும் கூறப்படுவது வழக்கம். பற்களுக்கான சிகிச்சைகளில் இந்த கிராம்பு எண்ணெயை பல் மருத்துவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்குக் காரணம் இந்த எண்ணெயில் உள்ள கிருமிநாசினி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளாகும். இதன் காரணமாக வலி எளிதில் குறைகிறது. சருமத்தில் உண்டான தடிப்பு, சிறு காயம் மற்றும் பூச்சிக் கடி போன்றவற்றை சரி செய்ய இந்த எண்ணெய் பயன்படுகிறது.

Parsley Seeds in Tamil

மாதவிடாய் காலத்தில்

மாதவிடாய் காலத்தை எளிதாக கடப்பதற்கு பார்செலி உதவுகிறது. மாதவிடாய் வலி மற்றும் வீக்கம் போன்றவற்றில் இந்த மூலிகை பாரம்பரியமாக பல காலங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அசௌகரியத்தை உண்டாக்கும் நீர்த் தேங்குதல் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பாதிப்புகளை பார்செலியில் இருக்கும் நீர் பிரிப்புத் தன்மை எதிர்த்துப் போராடி ஒரு எளிதான மாதவிடாய் காலத்தை பெண்களுக்கு வழங்குகிறது.

சளி குறைய

குளிர்காலங்களில் மற்றும் மழைக்காலங்களில் சளி பிடித்துக் கொள்வது எல்லோருக்குமான ஒரு தொல்லை. சளித் தொந்தரவு இருக்கும்போது, சோர்வு, மூக்கடைப்பு , தொண்டை வறட்சி போன்ற சில அறிகுறிகள் உண்டாகும். மேலும் இருமல் போன்ற காரணத்தினால் இரவு நேர உறக்கம் கூட தடைப்பட்டுப்போகும். பார்செலி ஒரு சிறந்த சளி நீக்க மருந்தாக செயல்புரிந்து, இருமல் மற்றும் சளி தொடர்பான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

தாய்ப்பால் மறக்க

தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப் பால் நிறுத்துவதற்கு முயற்சி செய்யும் வேளையில், தாய்மார்கள் தங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் மற்றும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும். ஆகவே, அந்த காலகட்டத்தில் பாரம்பரிய மருத்துவர்கள் இவற்றிற்கான மூலிகைகளைப் பரிந்துரைக்கும்போது பார்செலியையும் இணைத்துக் கொள்கின்றனர். இதனால் இயற்கையான முறையில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் தாய்ப்பால் சுரப்பு குறைந்து பால் கட்டுதல் தடுக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் அசௌகரியங்கள் குறைக்கப்படுகிறது.


முகத்திற்கான சிகிச்சை

பிரெஷ் பார்செலி இலைகளைப் பயன்படுத்தி சருமத்தை பொலிவாகவும் மென்மையாகவும் வைத்துக் கொள்ள முடியும். பல்வேறு சக்திமிக்க வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த பார்செலி, சருமத்தில் ஏற்படும் வயது முதிர்விற்கான அறிகுறிகளைக் குறைத்து, புதிய சரும அணுக்கள் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Feb 2024 10:29 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...