/* */

அப்பப்பா.. தொழுநோய்..! எப்படி ஏற்படுகிறது? தெரிந்திருப்பது நல்லது..!

Leprosy Meaning in Tamil-தொழுநோய் அவ்வளவு எளிதாக அறிகுறிகளை காட்டுவதில்லை. நீண்ட நாட்கள் ஆகும்.ஆனாலும் குணப்படுத்தக்கூடியதே.

HIGHLIGHTS

Leprosy Meaning in Tamil
X

Leprosy Meaning in Tamil

Leprosy Meaning in Tamil

தொழுநோய் என்பது புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாகும் (NTD). இது இன்னும் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 2,00, 000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவாகின்றன. உலகளவில் தொழுநோயை ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாக ஒழிப்பதற்கு (10 000 பேருக்கு 1 க்கும் குறைவானவர்கள் என வரையறுக்கப்படுகிறது) ௨௦௦௦ம் ஆண்டில் (உலக சுகாதார அமைப்பு தீர்மானம் 44.9 இன் படி) அடையப்பட்டது.

மேலும் பெரும்பாலான நாடுகளில் 2010 இல் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் இருக்கையில், 2019 இன் தரவுகளின்படி, பிரேசில், இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் 10,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும் 13 நாடுகளில் (வங்காளதேசம், காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, மடகாஸ்கர், மொசாம்பிக், மியான்மர், நேபாளம், நைஜீரியா, பிலிப்பைன்ஸ், சோமாலியா, தெற்கு சூடான் , இலங்கை மற்றும் தான்சானியா ஐக்கிய குடியரசு) ஒவ்வொன்றும் 1000–10,000 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நாற்பத்தைந்து நாடுகளில் 0 பாதிப்புகள் மற்றும் 99-1000 க்கும் குறைவான புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

நமக்கு, தொழு நோய் என்றால் ரத்தக்கண்ணீர் படத்தில் வரும் எம்.ஆர்.ராதா மட்டுமே நினைவுக்கு வருவார். ஏனெனில் அந்தப்படத்தில் அவ்வளவு தத்ரூபமாக நடித்திருப்பார்.

தொழுநோய் ஏற்படக் காரணங்கள்

மெதுவாக வளரும் பக்டீரியா வகையைச் சேர்ந்த மைகோபாக்டீரியம் லேப்ரே என்ற பாக்டீரியா தொழுநோய் உண்டாக காரணமாக உள்ளது. 1873 ம் ஆண்டில் M. லேப்ராவை கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயரால், தொழுநோய் ஹான்ஸென் நோய் என்றும் கூறப்படுகிறது.

தொழுநோயின் அறிகுறிகள்

தொழுநோய் முதலில் நேரடியாக சருமத்தை பாதிக்கிறது. மூளைக்கு வெளிப்புறம் உள்ள நரம்புகளையும், முதுகுத்தண்டையும் பாதிக்கிறது. தொழுநோய் கைகளையும் பாதிக்கலாம். மூக்கின் மெல்லிய திசுக்களையும் பாதிக்கலாம். உருச்சிதைவு ஏற்படும் வகையில் சரும புண், கட்டிகள், பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆனாலும் கரையாத புடைப்பு போன்றவை தொழுநோயின் முக்கிய அறிகுறிகளாகும். சருமத்தில் உள்ள புண் வெளிர் நிறத்தில் காணப்படும்.

பாதிப்புகள்

கை மற்றும் கால்களில் உணர்வு இழந்து காணப்படும். தசைகள் பலவீனமாகும். தொழுநோய் தாக்கும் பாக்டீரியாவுடன் தொடர்பு ஏற்பட்டு 3 முதல் 5 வருடம் கழித்தே நோய் தாக்கத்திற்கான அறிகுறிகள் தென்படுகிறது. சிலருக்கு 20 ஆண்டுகள் கழிந்தும் அறிகுறிகள் தென்படாது. பாக்டீரியாவுடன் தொடர்பு ஏற்பட்ட காலம் மற்றும் அறிகுறிகள் தென்படும் காலம் ஆகிய இரண்டுக்கும் இடையேயான காலத்தை இன்குபேஷன் அதாவது அடைகாக்கும் காலம் என்று கூறுகின்றனர்.

இந்த அடை காக்கும் காலம் நீடித்து இருக்கும்போது ஒரு மனிதனுக்கு எப்போது?எந்த இடத்தில்? தொழு நோய் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தீர்மானிக்க முடியாத நிலை மருத்துவர்களுக்கு ஏற்படுகிறது.

தொழுநோயின் வகை

சருமத்தில் உண்டாகும் புண்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளைப் பொறுத்து தொழு நோய் வகை தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட வகை தொழு நோய்க்கும் அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் வேறுபடுகின்றன. தொழு நோயின் வகைகளைப் பார்ப்போம் :

ட்யுபர்குலைடு

இது ஒரு மிதமான, குறைவான தீவிர நிலையைக் கொண்ட ஒரு வகை தொழுநோய். இந்த வகை தொழு நோய் பாதிக்கபட்டவர்களுக்கு ஒன்று அல்லது ஒரு சில தழும்புகள் மட்டுமே இருக்கும். அந்த தழும்புகள் வெளிர் நிறத்தில் இருக்கும். சருமத்திற்கு அடியில் உள்ள நரம்புகளில் சேதம் ஏற்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட சருமத்தில் உணர்வு அற்று மரத்துப்போன நிலை இருக்கும். மற்ற வகை தொழுநோயை விட இந்த வகை தொழுநோயில் பரவும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.

லேப்ரோமடோஸ்

தொழுநோயின் தீவிர நிலையை இந்த வகை தொழு நோய் வெளிப்படுத்தும். சருமத்தில் பரவலாக கட்டிகளும் தடிப்புகளும் தோன்றும். தசைகள் வலிமை இழந்து, மரத்துப்போன நிலை உண்டாகும். மூக்கு, சிறுநீரகம் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகள் கூட பாதிக்கப்படலாம். மேலே கூறிய ட்யுபர்குலைடு தொழு நோய் வகையைக் காட்டிலும் தொற்றும் வாய்ப்பு இந்த வகை தொழுநோய்க்கு அதிகம்.

தொழுநோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?

சந்தேகம் வரும் வகையில் சருமத்தில் புண் ஏற்பட்டால், மருத்துவர் புண் ஏற்பட்டுள்ள இடத்தில் சருமத்தின் சிறு பகுதியை எடுத்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்புவார். இதனை ஸ்கின் பயோப்சி என்னும் திசுச் சோதனை என்று கூறுவது வழக்கம். ஸ்மியர் டெஸ்ட் என்னும் பரிசோதனையும் செய்யப்படும். ட்யுபர்குலைடு வகை தொழுநோயில் கிருமிகளைக் கண்டறிய முடியாது. இதற்கு மாற்றாக, லேப்ரோமடோஸ் வகை தொழுநோயில் ஸ்மியர் பரிசோதனை மூலமாக கிருமிகளைக் கண்டறிய முடியும்.

தொழுநோய் சிகிச்சை

தொழு நோய், குணப்படுத்தக் கூடிய ஒரு நோயாகும். கடந்த 20 ஆண்டுகளில் 16 மில்லியன் மக்கள் தொழுநோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர். தொழுநோய் உள்ள நோயாளிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் இலவச சிகிச்சை வழங்குகிறது. தொழுநோயின் வகைக்கு ஏற்ப சிகிச்சை மாறுபடுகிறது. தொற்றுப் பாதிப்பைப் போக்க நுண்ணுயிர்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நுண்ணுயிர்கொல்லி மருந்துகள் நீண்ட கால சிகிச்சைக்கு அதாவது குறைந்தது ஆறு மாத காலம் முதல் ஒரு வருட காலம் வரை பரிந்துரைக்கப்படுகின்றன.

நரம்பு சேதமாவது

தொழு நோயின் தீவிர நிலையில் உள்ளவர்கள் நீண்ட நாட்கள் நுண்ணுயிர்கொல்லி மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம். ஆனால் நுண்ணுயிர்கொல்லி மருந்துகள் நரம்பு சேதங்களை சரி செய்வது இல்லை. நரம்பு வலியை கட்டுப்படுத்தவும், சேதங்களை சரி செய்யவும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில் ப்ரெட்னிசோன் போன்ற ஸ்டீராய்டுகளும் அடக்கம். தலிடோமைடு என்னும் மருந்து உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒடுக்கும் வலிமை பெற்றது. இந்த மருந்து தொழுநோய் பாதிக்கப்பட்ட சரும கணுக்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இந்த தலிடோமைடு மருந்து அபாயத்தை விளைவிக்கும். இந்த மருந்து பிறப்புக் குறைபாடுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் கர்ப்பிணிகள் அல்லது கர்ப்பத்திற்கு தயாராகும் பெண்கள் இதனைப் பயன்படுத்தக்கூடாது,

தொழுநோய் விளைவுகள்

தொழு நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், நிரந்தரமாக உங்கள் சருமம், நரம்புகள், கை, கால்கள், பாதம் மற்றும் கண்கள் பாதிக்கப்படக்கூடும். கண்பார்வை இழப்பு , முகம் சிதைந்து போவது (நிரந்தர வீக்கம், கட்டிகள், புடைப்புகள் ஏற்படுவது ) , ஆண்களுக்கு இனப்பெருக்க உறுப்பில் பாதிப்பு , சிறுநீரக செயலிழப்பு , தசைகள் பலவீனம் காரணமாக கைகள் சூம்பிப் போவது, கால்களில் திடம் இல்லாமல் போவது,

மூக்கின் உட்பகுதியில் நிரந்தர பாதிப்பு, இதன் காரணமாக மூக்கில் இரத்தம் வடிதல், மூளைக்கு வெளிப்புறம் உள்ள நரம்புகள் சேதமடைவது, முதுகுத்தண்டு நரம்புகள் சேதம் அடைவது, கை, கால்கள், பாத நரம்புகள் சேதம் அடைவது, நரம்புகளில் சேதம் ஏற்படுவதால் மரத்துப் போன நிலை உண்டாகும் அபாயம் ஏற்படலாம்.

தொழு நோய் தொடர்பான நரம்பு சேதம் உள்ளவர்களுக்கு கை, கால்கள், பாதம் போன்ற இடங்களில் வெட்டு, எரிச்சல் அல்லது காயம் ஏற்பட்டால் அதனால் உண்டாகும் வலியை அவர்களால் உணர முடியாது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 11 March 2024 5:57 AM GMT

Related News