/* */

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால்..! ஆய்வில் கண்டுபிடிப்பு..!

தாய்ப்பால், குழந்தைக்கான ஊட்டச்சத்தை மட்டும் வழங்கவில்லை, குழந்தையின் மூளை வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றுகிறது.

HIGHLIGHTS

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால்..! ஆய்வில் கண்டுபிடிப்பு..!
X

Infant brain-boosting sugar molecule found in breast milk in tamil, Infant brain-boosting sugar molecule found in breast milk, Research on breast milk, Breast milk boost infant brain, Myo-inositol a small cyclic sugar molecule in Breast milk

தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் ஆதாரமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்யமான மூளை வளர்ச்சிக்கும் முக்கியமான நுண்ணூட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.

சமீபத்தில், தாய்ப்பாலில் உள்ள ஒரு குறிப்பிட்ட பாகமான Myo-inositol பற்றி ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடத்தக்க ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது குழந்தைகளின் மூளையில் நரம்பியல் இணைப்புகள் உருவாக்குவதை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த கண்டுபிடிப்பு, மூளை செயல்பாட்டில் உணவு தேர்வுகளின் பாதிப்பை எடுத்துக்காட்டுகிறது. மேலும் அதன் ஊட்டச்சத்து மதிப்பிற்கு அப்பால் தாய்ப்பாலின் சிக்கலான தன்மையைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


மியோ-இனோசிட்டால் (Myo-Inositol)

Myo-inositol என்பது தாய்ப்பாலில் இருக்கும் ஒரு சிறிய சர்க்கரை சுழற்சி மூலக்கூறு ஆகும். இது பொதுவாக பழங்கள் மற்றும் தானியங்கள் உட்பட வயது வந்தோருக்கான வழக்கமான உணவுகளில் காணப்படுகிறது.

ஜூலை 11ம் தேதி அன்று PNAS இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, குழந்தைகளின் மூளையில் நரம்பியல் இணைப்புகளின் வளர்ச்சியில் myo-inositol எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

"மூளையில் நுண்ணூட்டச்சத்துக்களின் விளைவுகள் உண்மையில் குறைவாகவே மதிப்பிடப்படுகின்றன.ஒரு நரம்பியல் நிபுணராக, எங்கள் கண்டுபிடிப்புகள் எனக்கு பிரமிக்க வைக்கின்றன." என்கிறார் நரம்பியல் இணை பேராசிரியரும் முதன்மை ஆய்வாளருமான, தாமஸ் பைடரர்.

முந்தைய ஆராய்ச்சி, தாய்ப் பால் குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியை சாதகமாக்குகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் அடிப்படை காரணங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. இந்த நன்மைகளுக்கு காரணமான அடையாளம் தெரியாத கூறுகள் தாய்ப்பாலில் இருப்பதாக சில விஞ்ஞானிகள் ஊகித்தனர்.

தாய்ப்பாலின் பயோஆக்டிவ் கலவைகள் குழந்தையின் மூளை வளர்ச்சி செயல்முறைகளை எவ்வாறு ஆதரிக்கிறது என்பதற்கான முக்கிய நுண்ணறிவுகளை இந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது. பாலூட்டும் காலத்தில் சேகரிக்கப்பட்ட சின்சினாட்டி, மெக்சிகோ சிட்டி மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து தாய்மார்கள் நன்கொடையாக அளித்த தாய்ப்பாலின் மாதிரி பகுப்பாய்வுதான் ஆய்வின் தொடக்கப் புள்ளியாகும்.

உணவு, இனம் அல்லது இருப்பிடம் ஆகியவற்றைக் கருதாமல் அனைத்து தாய்ப்பால் மாதிரிகளிலும் சில நுண்ணூட்டச்சத்துக்கள் பொதுவானது என்ற குறிப்பிடத்தக்க உயிரியல் முக்கியத்துவத்தை கொண்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பாலூட்டுதல் முழுவதும் சீரான மாற்றங்களைக் காட்டும் கூறுகளை குறிப்பாக அடையாளம் காணுவதில் ஆராய்ச்சியாளர்கள் ஆர்வமாக இருந்தனர்.

நரம்பியல் இணைப்பில் Myo-Inositol பங்கு

ஆரம்பகால பாலூட்டலின் போது அனைத்து தாய்ப்பாலின் மாதிரிகளிலும் மியோ-இனோசிட்டால் அதிக செறிவுகளில் இருப்பதையும், காலப்போக்கில் படிப்படியாகக் குறைவதையும் ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். சுவாரஸ்யமாக, இந்த முறை மூன்று இடங்களில் இருந்து பெற்ற மாதிரிகளிலும் சீராக இருந்தது. "மூலக்கூறு தாயால் மிகவும் வலுவாகக் கட்டுப்படுத்தப்படுகிறது," என்கிறார் பைடரர்.

மூளை வளர்ச்சியில் அதன் தாக்கத்தைப் புரிந்து கொள்ள, ஆராய்ச்சிக் குழு, மனித நியூரான்கள் மற்றும் மூளைத் திசு உள்ளிட்ட பல்வேறு மாதிரிகளைப் பயன்படுத்தி மயோ-இனோசிட்டாலின் விளைவுகளை ஆய்வு செய்தது.

அவ்வாறு ஆய்வு செய்ததில், சர்க்கரை மூலக்கூறு, நியூரான்களில் சினாப்ஸ் மிகுதியை மேம்படுத்தியது. மேலும் மேம்படுத்தப்பட்ட நரம்பியல் இணைப்பை ஊக்குவிப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.


தாய்ப்பாலின் மதிப்பு

ஆய்வின் கண்டுபிடிப்பில், குழந்தையின் மூளையில் நரம்பு இணைப்புகளை உருவாக்குவதில் தாய்ப்பால் குறிப்பிடத்தக்க மதிப்பை கொண்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

"ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஒரு தாய் எப்படி காரணமாக இருக்கமுடியும் என்பதில் தாய்ப்பாலின் மதிப்பு எவ்வளவு மிகவும் முக்கியமானது என்பதை எங்கள் ஆய்வு நிரூபிக்கிறது" என்று பைடரர் கூறுகிறார்.

"தாய்ப்பாலின் சிக்கலான தன்மையை மதிப்பிடுவதன் முக்கியத்துவத்தை இது உண்மையிலேயே காட்டுகிறது. தாய்ப்பால் கலோரிகளின் ஆதாரம் மட்டுமல்ல, மிகவும் வளமான, சிக்கலான உயிர் திரவம். மேலும் தாயின் உடல் உண்மையில் தாய்ப்பாலின் கலவையை மாற்றியமைக்கிறது. தாய்ப்பால் குழந்தை வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் தேவைப்படுவதை அது உறுதி செய்கிறது.

நல்ல மூளை வளரணும்னா, குழந்தைகளுக்கு ஐந்து வயதுவரை கூட தாய்ப்பால் கொடுங்கம்மா..! (தாய்ப்பால் கொடுத்தால் அழகு போய்விடும் என்று சில பெண்கள் கூறுவது காதில் விழுகிறது. ஆனால், ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் தாய்மை அழகு கூடுகிறதாம். அதையும் ஒரு ஆய்வுதான் கூறுகிறது.)

Updated On: 30 July 2023 8:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...