/* */

பெருங்காயத்தை ‘கடவுளின் அமிர்தம்’ என ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா?

hing in tamil- நமது தினசரி உணவில் பயன்படுத்தப்படும் பெருங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்களை பட்டியலிட்டால், சொல்லிக்கொண்டே போகலாம். ‘கடவுளின் அமிர்தம்’ பெருங்காயத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம், வாங்க!

HIGHLIGHTS

பெருங்காயத்தை ‘கடவுளின் அமிர்தம்’ என ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா?
X

hing in tamil-பெருங்காயத்தின் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள் (கோப்பு படம்)

hing in tamil -பெருங்காயத்தை அதிகம் நுகர்ந்து பார்த்தல் கூடாது. அவ்வாறு செய்யும் போது தலைசுற்றல், வாந்தி போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. தாய்ப்பால் மூலம் இது ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதாலும், கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாலும், கர்ப்பிணி மற்றும் இளம் தாய்மார்கள் பெருங்காயத்தை தவிர்ப்பது நல்லது.

உணவின் ருசியில் மசாலா பொருட்களுக்கு எந்தளவு பங்கு உள்ளதோ அதே அளவு அதனை தயார் செய்யும் போது உண்டாகும் மணத்திலும் உண்டு. நம்மில் பலர் வாசனையை வைத்தே என்ன உணவு தயாராகிறது என்பதையும், எந்தளவு நாம் சாப்பிடப்போகிறோம் என்பதையும் முன்கூட்டியே முடிவு செய்வோம்.


இந்திய சமையலில் உள்ள மசாலா பொருட்களில் பெருங்காயத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. காரணம், இது உணவிற்கு ஒரு வித்தியாசமான சுவையையும். மணத்தையும் அளிக்கிறது. சமைக்காத சமயங்களில், பெருங்காயத்தின் மணம் பலராலும் வெறுக்கத்தக்கத்தக்க அளவு இருக்கும் என்பதே உண்மை. இதிலுள்ள மருத்துவ குணங்களால் பெருங்காயம் “கடவுளின் அமிர்தம்” என பல நாட்டு மக்களால் அழைக்கப்படுகிறது. கிட்டதட்ட இதன் மணமானது வெங்காய இன பூண்டுகளின் மணத்தை தான் நினைவுபடுத்துகிறது.

​தினசரி உணவில் பெருங்காயம்

பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என இரண்டு வகை இதில் உண்டு. இந்தியாவில் பொடி மற்றும் சிறிய துண்டு வடிவத்தில் கிடைக்கும் பெருங்காயத்தை நாள்தோறும் நம் உணவில் 125 முதல் 500 மி.கி. மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதேபோல் பயன்பாட்டின் அளவு ஒருவரின் வயது, எடை,உடல்நிலை பொறுத்து மாறுபடும். எனவே, அதிகமாக பயன்படுத்த நினைப்பவர்கள் தகுந்த ஆலோசனைகளுக்குப் பிறகே பெருங்காயத்தை பயன்படுத்த வேண்டும். பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் உள்ளது. அசைவ உணவு மூலம் மட்டுமே புரதச்சத்து பெற முடியும் என நினைக்கும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் பெருங்காயத்தை பயன்படுத்தி அதனை பெறலாம்.


​எப்படி வாங்குவது?

திடமான பெருங்காயம் பயன்படுத்த நினைப்பவர்கள் நன்கு வெளிறிய பழுப்பு நிறம் கலந்ததை வாங்க வேண்டுமே தவிர நன்கு கருத்திருந்தால் வாங்கக்கூடாது. அதேபோல தாவர ரெசின், ஸ்டார்ச், சோப்புக்கட்டி கலந்த கலப்பட பெருங்காயமும் சந்தைகளில் உலா வருகிறது.பெருங்காய வாசனை வருகிறது என்று இதனை அவசரப்பட்டு வாங்காமல் கவனமுடன் பார்த்து வாங்க வேண்டும். மேலும் காற்றுப் பட்டால் பெருங்காயம் மணம் போய்விடும் என்பதால், இதனை காற்றுப்புகாத கண்ணாடி பாட்டில்களில் போட்டு வைத்தால் மணமாக இருக்கும்.

பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதால் ஏராளமான மருத்துவ குணங்கள் நமக்கு கிடைக்கிறது. குறிப்பாக ஆயுர்வேதத்தில் பெருங்காயம் ஒரு மலமிளக்கியாக பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் 170 வகையான இனங்களை கொண்டுள்ள பெருங்காயத்தின் 3 இனங்கள் இந்தியாவில் வளர்கின்றன.

பெருங்காயத்தில் ஏற்படக்கூடிய 8 வகையான நன்மைகள் குறித்து காண்போம்.


செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு

பெருங்காயத்தின் மிக முக்கியமான செயல்பாடுகளின் ஒன்று செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதே ஆகும். வெங்காயம், பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் இதிலும் உள்ளதே இதற்கு காரணமாகும். இது ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாகவும், உணர்ச்சியை தூண்டும் தடுப்பானாகவும் செயல்படுவதால் வயிறு வீக்கம், வலி, குடற்புண், குடல் புழுக்கள், வாயு, வயிற்று எரிச்சல் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.

குறிப்பாக, செரிமான பிரச்சனைகளில் உடனடி நிவாரணம் கிடைக்க சிறிது பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து குடித்தால் சரியாகும். பெருங்காயம் வயிற்றில் உள்ள என்சைம்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி அமிலத்தன்மையை குறைப்பதால் இரைப்பை தொடர்பான பிரச்சனைகள் குணமாகிறது.

சுவாசப் பிரச்சனைகளுக்கு தீர்வு

பெருங்காயத்தில் உள்ள வைரஸ் எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா மற்றும் சளி போன்ற சுவாசப்பிரச்சனைகளை சரிசெய்கிறது. பெருங்காயத்தை இஞ்சி மற்றும் தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3 முறை குடித்து வந்தால் வறட்டு இருமல், மார்புச்சளி போன்றவை குணமாகும்.மேலும் இது ஒரு சுவாச தூண்டுதலாக செயல்படுகிறது. நெஞ்சு எரிச்சல், இருமல் மற்றும் கபம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் சிறிது பெருங்காயத்தை தண்ணீர் கலந்து அரைத்து மார்பில் தேய்த்து வர குணமாகும்.


​மாதவிடாய் பிரச்சனைகள்

பெண்களுக்கு பெருங்காயம் சிறந்த மருந்தாகும். இது உடலில் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை அதிகரித்து ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப் போக்கு போன்ற பிரச்சினைகள் குணமாக்குகிறது. ஒரு கப் மோரில் வெந்தயத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை கலந்து ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வந்தால் மாதவிடாயால் ஏற்படும் வயிற்றுவலி குறைய வாய்ப்பு உண்டு.

அதேபோல குறிப்பிட்ட நாளில் மாதவிடாய் ஏற்படாமல் தவிக்கும் பெண்கள் வாலேந்திர போளம், மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை அரைத்து சிறிய உருண்டையாக உருட்டி சாப்பிட்டால் ஒழுங்கான நாளில் மாதவிடாய் ஏற்படும். மேலும் சினைப்பை நீர்கட்டி பாதிப்பால் அவதிப்படும் பெண்களுக்கும் இது சிறந்த தீர்வு தருகிறது. குழந்தை பிறந்த பிறகு கர்ப்பப்பையிலிருந்து ‘லோசியோ’ எனப்படும் ஒருவகை திரவம் வெளிப்படும். இதனை முழுவதுமாக வெளியேற்ற பனை வெல்லம், வெள்ளைப் பூண்டுடன் பொரித்த பெருங்காயத்தை சேர்த்து பிரசவித்த முதல் 5 நாட்களுக்குக் கொடுத்து வரலாம். ஆனால் கர்ப்பிணிகள் பெருங்காயத்தை அதிகம் சேர்க்கக் கூடாது.

​சரும பாதுகாப்பு

மாறி வரும் சுற்றுச்சூழல் மற்றும் சந்தைகளில் விற்கப்படும் கலப்படம் கலந்த பொருட்களால் சருமமானது வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை பெருங்காயத்தின் மூலம் எளிதாக தீர்க்கலாம்தோலில் ஏற்படும் வீக்கம் அல்லது காய்ந்து போன தோல் ஆகியவற்றை சரிசெய்ய பெருங்காயத்தை நேரடியாக தோள்மீது தடவ வேண்டும்.


மனஅழுத்தங்களைக் குறைக்கும்

​பெருங்காயம் ஒரு மன அழுத்தத்தை சீராக்கி என மருத்துவ உலகில் அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் மன அழுத்தத்தை போக்குவதில் முக்கிய பங்கு வகித்து அதனை சார்ந்த பல உடல் நல பாதிப்புகளான கருவுறாமை, தூக்கமின்மை ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது என்பதே ஆகும்.அதேபோல் பெருங்காயத்தில் உள்ள பெருளிக் அமிலம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் திறன் கொண்டது.

மேலும், ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் நைட்ரஸ் ஆக்சைடின் அளவை அதிகரிப்பதால் பதற்றம் உடல் நடுக்கம் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஆகியவை தடுக்கப்படும். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு பெருங்காயம் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இவர்கள் பாகற்காயில் பெருங்காயத்தை கலந்து சாப்பிடலாம்.

ஆண்மைக்குறைவுக்கு தீர்வு

ஆண்மைக்குறைவு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பெருங்காயம் ஒரு சிறந்த தீர்வை தருகிறது. நன்கு வெண்ணெயில் வறுக்கப்பட்ட பெருங்காய பொடியை தேனுடன் கலந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால், ஆண்மைக்குறைவு தொடர்பான பிரச்சனைகள் தீரும். மேலும் பெருங்காயம் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுகளை நீக்கவும் செய்யும் என எகிப்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

சிறந்த வலி நிவாரணி

​ஒரு டம்ளர் தண்ணீரில் பெருங்காயத்தை கலந்து பருகினால் தலைவலி, ஒற்றைத் தலைவலி ஆகியவை நீங்கும். பல்வலி குணமாக இதனை எலுமிச்சை சாற்றுடன் கலந்து பேஸ்ட் போல தயார் செய்து வலி இருக்கும் இடத்தில் தடவினால் போதும். இதன் வாசனைப் பொருள் நரம்பு உத்தியாக செயல்பட்டு நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது.


புற்றுநோயைத் தடுக்கும்

​பெருங்காயம் புற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடிய காரணியான கார்சினோஜென்களின் பயன்பாட்டினை குறைப்பதால் புற்றுநோய் ஏற்படுவது குறைகிறது. மேலும் மார்பகம், நுரையீரல், குடல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை இது 50 சதவிகிதத்திற்கும் மேல் தடுப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. இதிலிருந்து தயாரிக்கப்படும் நீர் கல்லீரலின் வளர்சிதை மாற்றங்களை தடுக்கும் சில என்சைம்களின் செயல்பாடுகளை குறைப்பதன் மூலம் கல்லீரலானது பாதுகாக்கப்படுகிறது.

Updated On: 12 Feb 2023 7:55 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  2. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  3. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  4. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  5. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  6. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  7. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  8. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  9. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  10. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?