/* */

சீந்தில் மூலிகை பாதுகாப்பானதா? ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு

சீந்தில் மூலிகை பாதுகாப்பானது தான் என்று, மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சீந்தில் மூலிகை பாதுகாப்பானதா? ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு
X

சீந்தில் மூலிகை (கோப்பு படம்) 

சீந்தில் மூலிகை, ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. தினோஸ்போரா கார்டிபோலியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட இது, கூடுச்சி (Tinospora cordifolia) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பாதுகாப்பு தன்மை குறித்து சமூக ஊடகங்களிலும், சில அறிவியல் இதழ்களிலும் கருத்துகள் வெளியாகி சர்ச்சைகள் எழுந்தன.

இதனையடுத்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம், ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கூடுச்சி எனப்படும் சீந்தில் மூலிகை பாதுகாப்பானது. ஆனால், அதேபோன்ற தோற்றத்தில் காணப்படும் தினோஸ்போரா கிரிஸ்பா என்ற தாவரவியல் பெயர் கொண்ட தாவரங்கள், தீங்கை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.

கூடுச்சி எனப்படும் சீந்தில் மூலிகை ஆயுஷ் சிகிச்சையில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை குறித்து பல ஆய்வு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. கல்லீரலை பாதுகாக்கும் இதன் குணங்கள், நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த ஆயுர்வேத மருந்தை, பதிவு செய்யப்பட்ட ஆயுஷ் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, அது அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 5 Oct 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  2. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  3. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  4. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  5. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  6. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  7. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  8. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    இனிமே சமையலுக்கு மட்டுமல்ல... முகம் பளிச் என மாறவும் உதவப் போவது...
  10. ஆன்மீகம்
    விடுதலை விடுதலை பாடல்..! எதில் இருந்து விடுதலை..?