கோவிட்-19 என்றால் என்ன..? கொரோனாதான் அதுவா..? பார்க்கலாமா..?

covid 19 symptoms in tamil-அட அது என்னங்க கோவிட்-19 ? அதுக்கும் கொரோனாவுக்கும் என்ன தொடர்பு ? தெரிஞ்சிக்கலாம் வாங்க.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கோவிட்-19 என்றால் என்ன..? கொரோனாதான் அதுவா..? பார்க்கலாமா..?
X

கொரோனா பரிசோதனை (கோப்பு படம்)

COVID-19 என்றால் என்ன?

covid 19 symptoms in tamil-COVID-19 என்பது கொரோனா SARS-CoV-2 வைரஸால் உண்டாகிறது. அது நுரையீரல், சுவாசப்பாதைகள் மற்றும் பிற உறுப்புகளைப் பாதிக்கிறது.

கொரோனா வைரஸ் நோய்களை உண்டாக்கும் ஒரு பெரிய வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தவை. இது சாதாரண சளி, கடுமையான தீவிர சுவாச நோய்க்குறியை ஏற்படுத்தும்.

SARS-CoV-2 முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. மேலும் விலங்குகளில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த வைரஸ் மனிதர்களை எவ்வாறு தொற்றியது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

COVID-19 வைரஸ் மனிதர்களுக்கு ஏற்ப தன்னை பிறழ்வாக்கிக் கொண்டுள்ளது. இந்த பிறழ்வுகளில் சில டெல்டா மாறுபாடு போன்றவை. அசல் வைரஸை விட மிக எளிதாகப் பரவி மிகவும் கடுமையான நோய் தாக்கத்தை உண்டாக்கக் கூடியதாக உள்ளது.

COVID-19 அறிகுறிகள் அறிகுறிகள் பின்வருமாறு:

  • புதிதாக இருமல் அல்லது மோசமாகும் இருமல்
  • காய்ச்சல்
  • சுவாச பிரச்சினை
  • தொண்டை எரிச்சல்
  • தும்மல் மற்றும் மூக்கு ஒழுகுதல்
  • தற்காலிக வாசனை இழப்பு அல்லது சுவையில் மாற்றம்.

covid 19 symptoms in tamil-இந்த அறிகுறிகளால் மட்டுமே COVID-19 உள்ளது என்று அர்த்தமாகாது. இந்த அறிகுறிகள் அதிகமாக இருந்தால் பொதுவான நோய்களான ஜலதோஷம் மற்றும் ஃப்ளூ போன்றவையாகவும் இருக்கலாம்.

சுவாச பிரச்னை என்பது நிமோனியாவின் சாத்தியமான அறிகுறியாகும். மேலும் இவற்றிற்கு உடனடி மருத்துவ சிகிச்சைத் தேவை.

ஜலதோஷம், ஃப்ளூ அல்லது COVID-19 அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் செல்லவேண்டும்.

சில அறியப்படாத அறிகுறிகள்

சிலருக்கு சமயங்களில் அதிகளவில் காணப்படாத அறிகுறிகளும் தென்படலாம். அவை கீழே தரப்பட்டுள்ளன :-

  • வயிற்றுப்போக்கு
  • தலைவலி
  • தசை வலி அல்லது உடல் வலி
  • குமட்டல்
  • வாந்தி
  • உடல்நலக்குறைவு- ஒரு மாதிரியான அசவுகரிய உணர்வு, நோய் அல்லது அமைதியின்மை ஏற்படுதல்
  • நெஞ்சு வலி
  • வயிற்றுவலி
  • மூட்டு வலி
  • குழப்பம் மற்றும் எரிச்சல்

பொதுவாக கொரோனா தோற்று ஏற்பட்டால் 14 நாட்கள் வரை பொறுத்து அறிகுறிகள் தென்படலாம். அறிகுறிகள் தோன்றுவதற்கு 2 நாட்கள் வரை முன்பிருந்தே கொரோனா தொற்று இருப்பது தெரியாமலேயே வைரசை மற்றவர்களுக்கு பரப்பலாம். யாரேனும் கோவிட்-19 இருப்பதை அறிவதற்கு முன்பே அதை பரப்பமுடியும்.

COVID-19 (கொரோனா)எப்படி பரவுகிறது

COVID-19 கொரோனா திரவத்துளிகள் மூலம் மனிதருக்கு மனிதர் பரவுகிறது. நோய்தொற்று ஏற்பட்ட ஒரு நபர் இருமும்போதும், தும்மும்போதும் அல்லது பேசும்போதும் வைரஸ் கொண்ட திரவதுளிகளை பரவச் செய்யலாம்.

COVID-19 பரவுவதற்கான சாத்தியமான இடங்கள் :

  • நல்ல காற்றோட்டம் இல்லாத மூடப்பட்ட இடங்களில்
  • அருகில் பலர் கூட்டமாக இருக்கும் இடங்களில்
  • நெருக்கமான உரையாடல்கள், பாடுதல் அல்லது கூச்சலிடுதல்
  • நெருக்கமான தொடர்பு அமைப்புகளில்.

மக்கள் ஒருவருக்கொருவர் உடல் ரீதியாக விலகி இருப்பது ஆபத்தை குறைக்கும்.

எவ்வாறு பாதுகாப்பது?

  • இந்த எளிய வழிமுறைகள் வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் மற்றும் சமூகத்தையும் COVID-19 இலிருந்து பாதுகாக்க உதவும்.
  • ஜலதோஷம், ஃப்ளூ அல்லது COVID-19 அறிகுறிகள் இருந்தால், வீட்டில் இருந்த படியே மருத்துவரையோ அல்லது பரிசோதனை செய்துகொள்வது குறித்தோ ஆலோசனை பெறுங்கள்.
  • கையை மடக்கி முழங்கைக்குள் இருமுங்கள் அல்லது தும்முங்கள்.
  • அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து சமூக விலகலை கடைபிடியுங்கள்.
  • தேவைப்படும் போது உடல் ரீதியான இடைவெளி கண்டிப்பாக கடைபிடியுங்கள். முகக் கவசத்தை அணியுங்கள்.

covid 19 symptoms in tamil-வெளியே செல்லும்போது மாஸ்க் அணியுங்கள், வெளியே சென்று வந்தால் அடிக்கடி கைகளை சுத்தம் செய்யவும். கிருமி நீக்கம் செய்யவும்.

Updated On: 24 Aug 2022 8:59 AM GMT

Related News

Latest News

  1. திருவாடாணை
    மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
  3. குமாரபாளையம்
    ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு...
  4. திருவில்லிபுத்தூர்
    சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
  5. குமாரபாளையம்
    பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
  6. சோழவந்தான்
    பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
  8. ஈரோடு
    பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
  9. பெரம்பலூர்
    பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
  10. ஆன்மீகம்
    கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்