நம்ம நாட்டு காய்கறிகளில் இவ்வளவு நன்மையா..? லேடீஸ் சாய்ஸ்..!
நம் நாட்டு காய்கறிகளில் ஏராளமான நன்மைகள் இருப்பதை பெற்றோர் குழந்தைளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
HIGHLIGHTS

நாட்டு காய்கறிகள் (மாதிரி படம்)
நம் நாட்டுப் பாரம்பரிய காய்கறிகள் நம் உடலில் உள்ள 12 மண்டலங்களின் ஆரோக்கியத்தை காக்கும் உணவுகளாக விளங்குகின்றன. நோய் நீக்கும் மருந்துகளாகவும் அவைகள் பயன்படுகின்றன. நம் நாட்டு தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப விளையும் காய்கறிகள் நம் உடல் ஏற்பவையாக இருக்கும். அவை ஆரோக்கியம் பேணுவதுடன் நம் உடலின் பல மண்டலங்களை சுத்தப்படுத்தும் மருந்துகளாகவும் உள்ளன.
வெண்பூசணிக் காய்- ஜீரண மண்டலம், கத்தரிக்காய்- சிறுநீரக மண்டலம். கொத்தவரங்காய்- நரம்பு மண்டலம், புடலங்காய்- வாயுமண்டலம், அரசாணிக்காய் அல்லது பரங்கிக்காய் - தசைமண்டலம், கோவைக்காய்- தோல்மண்டலம், முருங்கைக்காய்- சுவாசமண்டலம், பீர்க்கன்காய்- நிணநீர்மண்டலம், தேங்காய்- எலும்புமண்டலம், எலுமிச்சம்பழத் தோல்- நாளமில்லாச் சுரப்பி மண்டலம், வெண்டைக்காய்- நாளமுள்ள சுரப்பி மண்டலம், வாழைக்காய்- இரத்த ஓட்ட மண்டலம்.
இப்படி நம் நாட்டு காய்கறிகள் பலவிதமான நமைகளை தருகின்றன. இதை அறியாமல் பீசா, பர்கர் என அறியாமையில் வீழ்ந்து கிடக்கிறோம். குழந்தைகளுக்கு நம் நாட்டு காய்கறிகளின் நமைகளை கொண்டு சேர்க்கவேண்டியது பெற்றோரின் கடமை.