கருப்பு பூஞ்சை ஆபத்தானதா..? அதன் அறிகுறிகள் என்ன..? தெரிஞ்சுக்கங்க..!
Symptoms of Black Fungus in Tamil-கருப்பு பூஞ்சைத் தொற்று பொதுவாக எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களிடம் இலகுவாக பரவுகிறது.
HIGHLIGHTS
Symptoms of Black Fungus in Tamil-கொரோனா தொற்று மீண்டும் திரிபு ஏற்பட்டு பல நாடுகளில் பரவி வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க சிறந்த முன் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும் அதன் பரவல் வெவ்வேறு பாதிப்புகளை உருவாக்கி வருகிறது.
அதில் ஒன்றுதான் மியூகோமிகோசிஸ் (Mucormycosis) என்று அழைக்கப்படும் கருப்புநிற பூஞ்சை தொற்று.
கருப்பு பூஞ்சைத் தொற்று காரணமாக ஒரு அச்சுறுத்தல் ஏற்படலாம். தற்போது கருப்பு பூஞ்சை பரவல் இல்லையென்றாலும் கூட அதைப்பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை. அதனால் கருப்பு பூஞ்சை குறித்த சில அடிப்படை விஷயங்களை நாம் இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
அதைப்பற்றிய விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே நாம் அதில் இருந்து தற்காத்துக் கொள்ளமுடியும்.
கருப்பு பூஞ்சை அல்லது மியூகோமிகோசிஸ் பாதிப்புக்கு என்ன காரணம்?
கருப்பு பூஞ்சை பாதிப்பு என்பது ஒருவகையான பூஞ்சைத் தொற்று காரணமாக ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் பூஞ்சை வித்துக்களுடன் தொடர்பு ஏற்படுபவர்களுக்கு, இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பூஞ்சைத் தொற்று தோலில் இருக்கும் காயங்கள் மூலம் உடலுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
கருப்பு பூஞ்சை
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைபவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடம் இந்த நோய் இலகுவாக பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது. போதுமான நோய் எதிர்ப்புசக்தி இல்லாததால், இது உடனே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அதேபோல நீரிழிவு நோயாளிகளுக்கு, எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்களை இலகுவாக கருப்பு பூஞ்சை பாதிக்கிறது. ஆகவே நீரிழிவு நோயாளிகள் இந்த பூஞ்சை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
black fungus symptoms in tamil
கண்ணில் தெரியும் கருப்பு பூஞ்சை அறிகுறி
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி கொரோனா நோயாளிகளில் கீழ்கண்ட நிலையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு அபாயம் அதிகம் என்று கூறியுள்ளது.
கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்து பயன்பாடு காரணமாக எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்,
நீண்ட நாட்களாக ஐசியு-வில் இருந்தவர்கள், இணை நோய் உள்ளவர்கள்,உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள், புற்றுநோய் , தீவிர பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்கள் போன்றோர்.
கருப்பு பூஞ்சை பொதுவான அறிகுறிகள் என்ன?
கருப்பு பூஞ்சை அல்லது மியூகோர்மைகோசிஸின் அறிகுறிகளில் இருமல், காய்ச்சல், மார்பு வலி, மூக்கு அல்லது சைனஸ் நெரிசல், கடுமையான தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை கருப்பு பூஞ்சையின் அறிகுறிகளாகும்.
நெற்றி, மூக்கு, கன்னப்பகுதி எலும்புகள், கண்கள் மற்றும் பற்களுக்கு இடையில் அமைந்துள்ள காற்றுப் பைகளில் தோல் தொற்றுநோயாக மியூகோமிகோசிஸ் வெளிப்படத் தொடங்குகிறது. இந்த அறிகுறிகள் இருப்பின் உடனே மருத்துமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.
இது தோல் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது மற்றும் உங்கள் உடலின் எந்தப் பகுதிக்கும் பரவலாம். கருப்பு பூஞ்சை உங்களுக்கு கருப்பான தோல் திசு, சிவத்தல், வீக்கம், மென்மை, புண்கள், கொப்புளங்கள் ஆகியவற்றைக் கொடுக்கும். அப்போது ஏற்படும் சில அறிகுறிகள் :
- மூக்கில் அடைப்பு மற்றும் இரத்தப்போக்கு
- கண்களின் வீக்கம் மற்றும் கண்ணில் வலி
- கண் இமைகள் பாதிப்பு
- மங்கலான மற்றும் இறுதியாக, பார்வை இழப்பு.
- மூக்கைச் சுற்றி கருப்பு நிற புள்ளிகள் இருக்கலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2