/* */

தமிழகத்தில் ரவுடிகள் அதிகமுள்ள இடங்கள்..

Rowdy City in Tamilnadu-தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்புக்குள்ளாவது, அப்பகுதி ரவுகளின் அட்டகாசம் தலைதூக்கும் போதுதான். சில ஆண்டுகளுக்கு முந்தைய காவல்துறை ஆவணங்களின்படி, தமிழகத்தில் ரவுடிகள் தோராயமான எண்ணிக்கையில் அதிகம் உள்ள இடங்களின் விவரங்கள் வருமாறு:

HIGHLIGHTS

Rowdy City in Tamilnadu
X

Rowdy City in Tamilnadu

Rowdy City in Tamilnadu-சென்னை - 3175

தலைநகரில் கொலை சம்பவங்கள் அதிகரித்துவிட்டதை பல உதாரணங்களோடு கூறலாம். கடந்த மே மாதத்தில் மட்டும் 20 நாட்களில் சென்னையில் மட்டும் 18 கொலைகள் அரங்கேறி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திருநெல்வேலி - 1548

அல்வாவுக்கும், அரிவாளுக்கும் பெயர்போன நெல்லைச்சீமையில், 1548 பேர் உள்ளனர். இவர்களில் நெல்லை நகரில் மட்டும் 334 பேர் உள்ளதாக, காவல்துறை பதிவேடு தெரிவிக்கிறது.

மதுரை - 1372

மல்லிகைக்கு பெயர்போனது நம் மதுரை; அடிதடிகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. மதுரை நகரில் மட்டும் 888 ரவுடிகள் உள்ளனர். புறநகரில் 484 பேர் உள்ளனர்.

கன்னியாகுமரி - 748

அட கன்னியாகுமரியிலும் ரவுடிகள் இந்த எண்ணிக்கையில் இருக்கிறார்களா என்று வியக்காதீர்கள். ஆமாம், இந்த பூனையும் பால் குடிக்கிறது. இம்மாவட்டத்தில், 748 ரவுடிகளுடன் இம்மாவட்டம் தமிழகத்தில் 4ம் இடத்தில் உள்ளது.

கோவை - 738

மரியாதை தெரிந்த, குளுமையான நகரம் கொங்கு மண்ணான கோவை. இங்கு, கோவை நகரில் 512, புற நகரில் 226 ரவுடிகள் உள்ளனர்.

மற்ற மாவட்டங்கள்

இதேபோல், கடலூர் - 680, விருதுநகர் - 655, சேலம் - 652, தூத்துக்குடி - 605, தஞ்சை மாவட்டத்தில் 584 ரவுடிகள் இருப்பதாக, காவல்துறை பதிவேடு தெரிவிக்கிறது. ரவுடிகளின் எண்ணிக்கை நீலகிரி மாவட்டத்தில் குறைவாக உள்ளது. இங்கு 65 ரவுடிகள் மட்டுமே போலீஸ் பட்டியலில் உள்ளனர்.

திருவாரூர், பெரம்பலூரில் தலா 84 பேர் உள்ளனர். இது தவிர காஞ்சிபுரம்-416, திருவள்ளூர்-318, விழுப்புரம்-452, கடலூர்-680, வேலூர்- 376 ரவுடிகள் உள்ளனர். இப்பட்டியல் சில ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளி விவரங்களின் அடிப்படையிலானது என்பதால், தற்போதைய எண்ணிக்கையுடன் சற்று மாறுபடலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 April 2024 9:54 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  4. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  5. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  7. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...
  8. ஈரோடு
    ஈரோடு திருநகர் காலனி நந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 37வது ஆண்டு...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  10. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!