திருச்சியில் ரயில்வே ஊழியர் மனைவியிடம் நகை பணம் மோசடி

திருச்சியில் ரயில்வே ஊழியர் மனைவியிடம் நகை பணம் மோசடி செய்த இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருச்சியில் ரயில்வே ஊழியர் மனைவியிடம் நகை பணம்  மோசடி
X

திருச்சி உறையூர் சுண்ணாம்பு கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. தென்னக ரெயில்வேயில் புக்கிங் கிளார்க்காக பணியாற்றிய அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.அதைத் தொடர்ந்து ஜெயலட்சுமிக்கு கணவரின் பென்சன் தொகை வருகிறது.இதற்கிடையே உறையூர் வண்டிக்கார தெருவில் வசிக்கும் பாலாஜியின் மூத்த சகோதரர் ஜெயச்சந்திரன் (வயது63) சகோதரி பிரபாவதி (வயது 65) ஆகியோர் ஜெயலட்சுமிக்கு சொந்தமான 25 பவுன் நகைகளை அடமானம் வைப்பதற்காக வாங்கியுள்ளனர்.

மேலும் ரூ. 3 லட்சத்து 97 ஆயிரம் ரொக்க பணத்தையும் கடனாக பெற்றனர் .அது மட்டும் அல்லாமல், பாலாஜியின் பென்சன் தொகையையும் ஜெயலட்சுமியின் ஏடிஎம் மூலம் எடுத்து செலவழித்துள்ளனர்.இந்த நிலையில் குடும்ப தேவைகளுக்காக ஜெயலட்சுமி அடமானம் வைக்க கொடுத்த நகை பணம் மற்றும் ஏடிஎம் கார்டை திரும்ப கேட்டுள்ளார்.

இதில் ஏற்பட்ட தகராறில் ஜெயச்சந்திரன், பிரபாபதி ஆகிய இருவரும் ஜெயலட்சுமியை தகாத வார்த்தையால் திட்டி அவரது ஆடைகளை கிழித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயலட்சுமி உறையூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Sep 2023 4:37 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    சாலை விபத்தில் பெண் பலி உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
  3. குமாரபாளையம்
    அகில இந்திய மல்யுத்த போட்டி: குமாரபாளையம் பயிற்சியாளர் நடுவராக
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய சரக்கு ரயில்
  5. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
  6. ஈரோடு மாநகரம்
    ஈரோடு கனி மார்க்கெட் மீண்டும் செயல் பட தொடங்கியதால் மகிழ்ச்சியில்...
  7. தென்காசி
    தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு
  8. சினிமா
    நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக கணவர் போனி கபூர் மீண்டும் சர்ச்சை
  9. தென்காசி
    தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்
  10. ஆலங்குளம்
    மிளா தாக்கி இளைஞர் உயிரிழப்பு: வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை