/* */

300 கோடி பேருக்கு ஒமிக்ரான் பரவுமாம்: ஆனாலும் பயப்பட வேண்டாம்

உலகில், அடுத்த இரு மாதங்களில் 300 கோடி பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

HIGHLIGHTS

300 கோடி பேருக்கு ஒமிக்ரான் பரவுமாம்: ஆனாலும் பயப்பட வேண்டாம்
X

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட, கொரோனா வைரசின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் வைரஸ், இந்தியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில், உலகளவில் ஒமிக்ரான் தினசரி பாதிப்பு மூன்றரை கோடியாக இருக்கும், அடுத்த இரு மாதங்களில் 300 கோடி பேருக்கு இதன் தாக்கம் ஏற்பட்டிருக்கும் என்று, அமெரிக்க பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகள் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில், ஒமிக்ரான் உச்சமடையும். அந்த நேரத்தில், தினமும் மூன்றரை கோடி பேருக்கு தினசரி பாதிப்பு இருக்கும். வருகின்ற ஏப்ரல் மாதத்தில், இது டெல்டா வைரஸ் பரவலை விட வேகமாக, 300 கோடி பேரை பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ள ஆய்வில், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறைவாக இருக்கும். டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் 40 முதல் 45 சதவீதம் குறைவாக உள்ளது என்று கூறியுள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களை ஒமிக்ரான் தாக்கி, மருத்துவமனைய்ல் சேர்க்கும் வாய்ப்பு 50 முதல் 60 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

டென்மார்க்கில் இருந்து வெளியான மற்றொரு ஆய்வின் முடிவும் இதை ஒத்தே உள்ளது. டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பின் தீவிரம் லேசானதுதான் என்று, அது கூறியுள்ளது.

Updated On: 24 Dec 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  2. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  3. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  4. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  5. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  6. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  7. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  8. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  9. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...