தமிழ்நாட்டில் நவ. 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
தமிழ்நாட்டில், நவ. 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
HIGHLIGHTS
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் ஒன்றாம் தேதி முதல், திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகளும் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வழங்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடு இன்று முதல் நீக்கப்படுகிறது. மதுக்கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8-வது வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதி அளிக்கப்படும். அதேபோல், கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகளையும் நடத்துவதற்கு அனுமதி உண்டு. விளையாட்டு அரங்குகளில் பயிற்சி, விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1 முதல், மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே (கேரளா தவிர) சாதாரண மற்றும் ஏசி பொது பேருந்து போக்குவரத்து, 100% இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
எனினும், திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.