/* */

தமிழகம், மகாராஷ்டிராவில் தொற்று அதிகரிப்பு: கொரோனா 4வது அலை ஆபத்து?

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. 4வது அலை வருவதை தவிர்க்க முடியாது என மும்பை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

தமிழகம், மகாராஷ்டிராவில் தொற்று அதிகரிப்பு: கொரோனா 4வது அலை ஆபத்து?
X

இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு கொரோனா பரவலின் வேகம் குறைந்தது. குறிப்பாக, கடந்த 3 மாதங்களில் பெருந்தொற்றின் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் இருந்தது. எனினும், கடந்த சில வாரங்களில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில், தொற்றின் பரவல் மிதமாக எழுச்சி கண்டுள்ளது.

தமிழ்நாட்டில், மே மாதம் 27ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு 335 ஆக இருந்த நிலையில், நேற்றுடன் முடிவடைந்த வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 659 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து காணப்படுகிறது. எனவே உரிய கவனம் செலுத்த வேண்டுமென்று, மத்திய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு அறிவுரை வழங்கி இருக்கிறது.

இதேபோல், மகாராஷ்டிராவிலும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மும்பையில் நேற்று ஒரே நாளில் 763 பேர் கொரோனாவால் பாதித்த நிலையில், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும், 3 ஆயிரத்து 735 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து, மும்பை மாநகராட்சி ஆணையாளர் இக்பால் சகால் நேற்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினர். அவர் கூறுகையில், கொரோனா 4-வது அலை வருகிற ஜூலை மாதம் ஏற்படலாம் என கான்பூர் ஐ.ஐ.டி. நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

எனவே, அவர்களது முந்தைய எச்சரிக்கை பலித்து உள்ளது. எனவே தற்போதைய அவர்களது இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலம் தொடங்குவதால், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

Updated On: 4 Jun 2022 12:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!