ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்- முக்கிய நகரங்களில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி
Yuvan Concert Coimbatore- வரும் ஆங்கில புத்தாண்டையொட்டி திருநெல்வேலி, கோவை மற்றும் திருச்சியில், யுவன் ஷங்கர் ராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது.
HIGHLIGHTS
Yuvan Concert Coimbatore-- தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முக்கிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசைஞானி இளையராஜாவின் புதல்வர் என்பது அனைவரும் அறிந்ததே. 'புலிக்கு பிறந்தது புலிதான்' என்பதை நிரூபிக்கும் விதமாக, இவரும் இசை அமைப்பாளராக, திரையிசை உலகில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். தவிர, இவர் பாடகராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. பல பாடல்களை இதுவரை பாடி இருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா தனது திரைப்பயணத்தில், நடப்பாண்டில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 1997-ம் ஆண்டு, டி சிவாவின் தயாரிப்பில் வெளிவந்த 'அரவிந்தன்' என்ற படத்திற்கு இசையமைத்து, தனது பயணத்தைத் தொடங்கினார் யுவன் ஷங்கர் ராஜா.
'இசை உணர்வுபூர்வமானது' என்று கூறும் யுவன் ஷங்கர் ராஜா, 'நான் ஒரு சிறந்த இசையமைப்பாளரின் மகன். என்னை வடிவமைத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. இந்த இசை உணர்வை இறுதி வரை கொண்டு செல்வேன்,' எனவும் கூறியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா திரைப்பட இசை அமைப்பாளராகி 25 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, அதைக் கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். முதல் இசை நிகழ்ச்சி மலேசிய தலைநகர் கோலாம்பூரில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களில் விற்றது சாதனை அளவாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம், ‛யு அண்ட் ஐ' என்ற தலைப்பில் யுவன் இசை நிகழ்ச்சி நடத்தினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து, கோவையிலும், அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது, டிசம்பர் மாத இறுதி நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், 'பிளாக்சீப்ஸ்' சார்பில், தமிழகத்தில் மூன்று இடங்களில், யுவன் ஷங்கர் ராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'நியூ இயர் வாரம் - ஆரவாரம்' என்ற தலைப்பில், 'யுவன் லைவ் இன் கான்செர்ட்' இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நேரடியாக பங்கேற்கும் இசை நிகழ்ச்சி, வரும் 25ம் தேதி திருநெல்வேலியிலும், அதைத்தொடர்ந்து, 31ம் தேதி கோயம்புத்துாரிலும், ஆங்கில புத்தாண்டு தினமான, 2023ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி திருச்சியிலும் யுவன் ஷங்கர் ராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அற்புதமாக கொண்டாடும் ஒரு இசை வாரமாக, டிசம்பர் மாத இறுதியைக் கொண்டாடி, பிறக்கிற ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக, இந்நிகழ்ச்சியை 'பிளாக்சீப்ஸ்' இசை ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்வாக ஏற்பாடு செய்துள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2