எங்கள் திருமணத்தால் நிறைய காசு பார்த்துட்டாங்க.. ரவீந்தர்- மஹாலக்ஷ்மி பேச்சு
Ravindar Chandrasekaran News -எங்கள் திருமணத்தால் நிறைய காசு பார்த்துட்டாங்க என ரவீந்தர்- மஹாலக்ஷ்மி பேசியுள்ளனர்.
HIGHLIGHTS
Ravindar Chandrasekaran News - சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் மகாலட்சுமி. இவர் சன் மியூஸிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் தேவதையை கண்டேன் தொடரின் கதாநாயகன் ஈஸ்வருடன் தொடர்பு இருப்பதாக, அவரது மனைவி போலீசில் புகார் அளித்தது பரபரப்பாக பேசப்பட்டது.
நடிகை மகாலட்சுமி அனில் என்பவரை திருமணம் செய்து, ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. பின்னர் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர்.
இதனைத்தொடர்ந்து சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார் மகாலட்சுமி. தற்போது விடியும் வரை காத்திரு என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கிறார்.
vj mahalakshmi marriage
இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திர சேகருக்கும், நடிகை மகாலட்சுமிக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. ரவீந்தர் சந்திரசேகருக்கும் இது 2வது திருமணம்.
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர், தனி விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்களை வெளியிட்டனர்.
vj mahalakshmi news
ஏற்கெனவே ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி திருமணம் குறித்து இணையத்தில் பல்வேறு சர்ச்சைகளும், கருத்துக்களும் பரவினாலும், இவர்கள் இருவரும் தற்போது சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திருமணம் பற்றி தற்போது பேசிவருவது இணையத்தில் வைரலாகியுள்ளது. எங்க திருமணம் ரொம்ப முக்கியமா, எங்க கல்யாணத்தை வைத்து நிறைய பேர் காசு பாத்துட்டாங்க என தயாரிப்பாளர் ரவீந்தர் பேசி இருக்கிறார். மஹாலக்ஷ்மியை திருமணம் செய்ததால் சந்தித்த விஷயங்கள் பற்றி அவர் பேசி இருக்கிறார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2