உச்ச நடிகரால் சாமியாரான நடிகை! பயில்வான் சொன்ன செய்தி!
சித்தாரா ஏன் இதுவரை திருமணம் செய்யாமல் இருக்கிறார் தெரியுமா?
HIGHLIGHTS
தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் சித்தாரா. இவர் தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் இப்போது வரை திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் ஒரு உச்ச நடிகர்தானாம்.
1986 ஆம் ஆண்டு காவிரி திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை சித்தாரா, புதுப்புது அர்த்தங்கள், புதுப்புது ராகங்கள், புதுவசந்தம், புரியாத புதிர் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தார். பின்னர் அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
சித்தாரா ஒரு நேர்மையான நடிகை. கவர்ச்சி வேடங்களே வேண்டாம் என்று கூறி வந்தார். இதனால் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார்.
சித்தாரா ஒரு பக்திமான். பல ஆண்டுகளாக ஒரு உச்ச நடிகரை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், காதல் கை கூடவில்லை என்பதால் வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஒரு சாமியாரின் பேச்சை கேட்டு ஆன்மீகத்தில் ஈடுபட்டார். சாமியாரின் சொல் கேட்டு சித்தாரா துறவர வாழ்க்கைக்கு நுழைந்தார். தற்போது அவர் ஒரு ஆசிரமத்தில் தங்கி ஆன்மீக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சித்தாராவின் முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். அவர் ஆன்மீக ஞானத்தை அடைவதற்காக துறவர வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ளார். இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
ஆனால் சித்தாரா இதுகுறித்து கடந்த 2020ம் ஆண்டு ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, எனது பெற்றோரை விட்டு பிரிந்து அவர்களிடமிருந்து வெகுதூரம் செட்டில் ஆகாததால் நான் திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை என்று எனது தந்தை பரமேஸ்வரன் நாயரிடம் மிகவும் நெருக்கமாக இருந்தேன். என் தந்தையின் மறைவுக்குப் பிறகு, திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் மறைந்துவிட்டது