விஷ்ணு - ரஜினி காதல் கதை.... விவாகரத்தில் முடிந்தது ஏன்?
நடிகர் விஷ்ணு விஷாலின் காதல் கதை, கிரிக்கெட் முதல் சினிமா வரை
HIGHLIGHTS
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவரது படங்களில் ஏதாவது ஒரு விசயம் வித்தியாசமாக இருக்கும் என நம்பி இவருக்கென்று தனி ரசிகர்களும் இருக்கிறார்கள். தனக்கான கதையை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடிக்கும் இவரது வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு எளிதாக நகர்ந்துவிடவில்லை.
கிரிக்கெட்டிலும் தோற்று சினிமாவிலும் தோற்று இவர் நிற்கதியாக நிற்கையில் அப்பாவின் பேச்சைக் கேட்டு சினிமாவிலேயே தொடர்ந்து இப்போது ஒரு நல்ல நிலைக்கு வந்திருக்கிறார். இதில் இவரது காதல், திருமண வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
எந்த கஷ்டம் வந்தாலும் உடன் இருப்பேன் என்று கூறிய காதலி மனைவியான பிறகு சினிமாவின் காரணமாக மனம் கசந்து வெளியேறியுள்ளார் என்பது பொதுவாக சினிமா நடிகர்களின் வாழ்க்கையில் சகஜமானதாகவே இருக்கிறது.
வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால் . அவருக்கு கிரிக்கெட்தான் வாழ்க்கை. ஆனால் பிரச்னை மேல் பிரச்னை வந்து தோற்று விட்டதாக தானே தளர்ந்துவிடுகிறார். பின்னர் சினிமாவுக்கு வந்தார். ஆனால் சினிமாவிலும் தொடர் தோல்வி.
தன்னுடன் படித்த ஜூனியர் மாணவியான ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் வெற்றிக்காக போராடிய போது காதல் மனைவியுடனும் மனம் கசந்து போராட்டங்கள் தொடர்ந்தது.
விஷ்ணு - ரஜினிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. சிறிது நாள்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் பின்னர் பரஸ்பரம் இருவரும் பிரிந்தனர். விவாகரத்து செய்தனர். திருமணம் செய்து 7 ஆண்டுகளில் பிரிந்தனர்.
விஷ்ணு தற்போது இன்னொருவருடன் காதலில் இருக்கிறார் ஜூவாலா கட்டா. ஜூவாலாவும் விஷ்ணுவும் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
விஷ்ணு விஷாலின் திருமண வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக இருந்தது. ஆனால் அவர் தற்போது தனது இரண்டாவது மனைவி ஜூவாலா கட்டாவுடனே மகிழ்ச்சியாக இருக்கிறார்.