/* */

மாவீரன் படத்துக்காக நம்ம விஜய் சேதுபதி வாங்குன சம்பளம் எவ்ளோ தெரியுமா?

விஜய் சேதுபதி தனது குரல் கொடுக்க மாவீரன் படத்துக்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!

HIGHLIGHTS

மாவீரன் படத்துக்காக நம்ம விஜய் சேதுபதி வாங்குன சம்பளம் எவ்ளோ தெரியுமா?
X

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கேட்கும் அசிரீரீ குரலுக்காக விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து பலரும் தேடி வருகின்றனர். காரணம் சக போட்டியாளரான நடிகருடைய படத்தில் நடிக்கவே டபுள் சம்பளம் கேட்பவர்களுக்கு மத்தியில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய்சேதுபதி எவ்வளவு சம்பளம் வாங்கியிருப்பார் என்பது அவர்களது கேள்வி.


சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது மாவீரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக சரிதாவும் தங்கையாக விஜய் டிவி புகழ் மோனிஷா பிளஸ்ஸியும் நடித்து அசத்தியிருந்தனர். சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருந்தாலும் அவர்களுக்குள் காதல் பாடலோ, காதல் காட்சிகளோ எதுவும் கிடையாது. ஆனாலும் அதிதி படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நடித்திருந்தார்.


இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனங்கள், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் பாராட்டப்படவேண்டியதுதான். முக்கியமாக இசை, பரத் ஷங்கர் சிறப்பாக கையாண்டிருந்தார், சீனா சீனா பாடலும் சரி, வண்ணாரப்பேட்டையில பாடலும் சரி சிறப்பான டிரெண்டிங் சாங்காக அமைந்திருந்தது. அதேநேரம் பின்னணி இசையிலும் அவர் தனது திறமையை நிரூபித்திருந்தார். இமான், அனிருத் ஆகியோருக்கு இணையாக இவர் தனது திறனை வெளிப்படுத்தியிருந்தார்.


இவர்கள் அனைவரையும்விட முக்கியமான ஒரு நபர்தான் விஜய் சேதுபதி. அவர் படத்தில் எங்கேயும் வரவில்லை என்றாலுமே அவரது குரல் படம் முழுக்க வந்துகொண்டிருந்தது. விஜய் சேதுபதி சொல்ல சொல்ல சிவகார்த்திகேயன் அதனை செய்வது, இதனால் யோகிபாபு மாட்டிக் கொண்டு முழிப்பது என படத்தில் கிடைக்கும்போதெல்லாம் காமெடி சரவெடிதான். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பெரிய ஹீரோ படத்தில் விழுந்து விழுந்து சிரித்தனர் ரசிகர்கள். விஜய் சேதுபதி இந்த படத்தில் வாய்ஸ் கொடுப்பதற்காக எவ்வளவு சம்பளம் வாங்கியிருப்பார் என்று பலரும் தேடிக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் ஒரு தகவல் கிடைத்துள்ளது.


இந்த படத்தில் விஜய் சேதுபதி குரலுக்காக அவர் சம்பளம் எதுவும் வாங்கவில்லையாம். தனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டாராம். மடோன் அஸ்வினும் லோகேஷ் கனகராஜும் மிக நெருங்கிய நண்பர்கள். இதனால் லோகேஷிடம் பேசி மடோன் விஜய் சேதுபதியை சந்திக்க சென்றிருக்கிறார். அவரிடம் கதை குறித்து ஏற்கனவே லோகேஷ் பேசிவிட்டதாகவும், இதில் இவரது குரல் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்ததால் விஜய் சேதுபதி உடனே வாய்ஸ் கொடுக்க ஒப்புக் கொண்டுவிட்டாராம். படம் பாக்ஸ் ஆபிஸில் பிரித்து மேய்கிறது விரைவில் 1௦௦ கோடி ரூபாயை தொடுமாம்!

Updated On: 17 July 2023 6:50 AM GMT

Related News