/* */

300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
X

வாரிசு (பைல் படம்).

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான 'வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி பொங்கல் பண்டிகையொட்டி வெளியானது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார்.


இந்த படம் வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வாரிசு திரைப்படம் முதல் நாளே 19 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகின. உலக அளவில் 7 நாட்களில் ரூ.210 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 11 நாட்கள் முடிவில் 250 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.



தற்போது இந்தப் படம் 300 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியாக 26 நாட்கள் ஆகியுள்ளது. இதனை ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். #VarishHits300Crs , #VarisuBlockbuster என இரண்டு ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Updated On: 6 Feb 2023 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  5. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  8. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
  9. நாமக்கல்
    கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு 29ம் தேதி முன்பதிவு துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’