'வணங்கான்' என்றால் என்னங்க..? வாங்க தெரிஞ்சுக்குவோம்..!
vanaangan meaning in tamil-அது என்னங்க வணங்கான்..? அப்படின்னா என்ன? பார்க்கலாம் வாங்க..!
HIGHLIGHTS
vanaangan meaning in tamil-சமீப காலமாக வணங்கான் திரைப்படம் குறித்த தகவல்கள் மாறி மாறி வந்தன. வணங்கான் என்றால் என்னங்க..? பார்ப்போமா..?
வணங்கான் என்ற சொல் வணங்கு என்ற சொல்லின் எதிர்ப்பதமாகும். வணங்குதல் என்றால் வழிபாடு செய்தல், மரியாதை செய்தல், வணக்கம் வைத்தல், பெரியோரை தாழ் பணிந்து கும்பிடுதல் என்று பொருள் கொள்ளலாம்.
வணங்கான் என்ற தலைப்பில் தற்போது ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. வணங்கான் என்றால் யாருக்கும் பணியாதவன். அடங்காதவன். எதிரிகளைக்கண்டு பணியாமல் எதிர்ப்பவன். பிறருக்கு அநியாயம் செய்பவர்களைக்கண்டு பொங்குபவன். நியாயத்தை தட்டிக்கேட்பவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
தற்போது தமிழில் வணங்கான் என்ற ஒரு திரைப்படம் வெளியாக இருந்தது. இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த செய்தி வெளியானது.
இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார். சூர்யா ஒரு அறிக்கையில், திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்படவேண்டியுள்ளதால் விலகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த திரைக்கதை 'என்னைப் போன்ற ஒருவருக்கு பொருந்தாது' என்பதால் இதில் இருந்து விலகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சூர்யா தனது பதிவில் இயக்குனர் பாலாவை தனது மூத்த சகோதரர் என்று உணர்ச்சிவசமாக குறிப்பிட்டிருந்தார்.
பல மாதங்களாக வணங்கான் பற்றிய பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வதந்திகளை அப்போது சூர்யா மறுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது பாலா தமிழில் எழுதியுள்ள அறிக்கையில், "எனது தம்பி சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்க விரும்பினேன். இருப்பினும், கதையில் சில மாற்றங்களுக்குப் பிறகும், இந்த திரைக்கதை அவரைப் போன்ற ஒருவருக்கு பொருந்துமா என்று எனக்குத் தெரியவில்லை. சூர்யாவுக்கு என் மீது முழு நம்பிக்கை இருந்தது. ஆனால், ஒரு மூத்த சகோதரனாக, அவரை இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகுத் தள்ளாமல் இருப்பது எனது கடமை.
எனவே, அவர் திட்டத்தில் இருந்து விலகுவது குறித்த விருப்பத்தை சம்மந்தப்பட்ட அனைவரின் நலன்களுக்காகவும் சூர்யாவும் நானும் எடுத்த முடிவாகும். உண்மையில், சூர்யா இந்த முடிவு குறித்து மிகவும் வருத்தப்பட்டார். ஆனால் இது என் சகோதரனின் சிறந்த நன்மைக்காக எடுத்த முடிவாகும் என்று இயக்குனர் பாலா குறிப்பிட்டிருந்தார்.
நான் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று ரசிகர்களுக்கு இயக்குனர் பாலா உறுதியளித்தார். மேலும் எழுதினார், "நான் நந்தாவில் பார்த்த சூர்யா; பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா, அதைப்போல ஒரு புதிய சூர்யாவை நீங்கள் பார்க்கும் தருணம் வரும். நாங்கள் இருவரும் சரியான நேரத்தில் ஒன்று சேர்வோம்.
சூர்யா விலக்கியதையடுத்து இயக்குனர் பாலா அதர்வாவை வைத்து அந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2