Kalagathalaivan Update: கலகத்தலைவன் படம் குறித்து உதயநிதி என்ன சொன்னார்?
Kalaga Thalaivan Movie Update Tamil -மகிழ்திருமேனி இயக்கும் படம் எப்படி இருக்கும் என தெரிந்த ரசிகர்களுக்கு குறைவில்லாமல் இந்த படத்தை கொடுத்துள்ளார்
HIGHLIGHTS
Kalaga Thalaivan Movie Update Tamil-கலகத் தலைவன் திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கிறார் உதயநிதி. திரைப்படங்கள் தயாரிப்பது, விநியோகம் செய்வது, நடிப்பது, அரசியல் என்பதை தாண்டி தனிப்பட்ட விசயங்களையும் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் உதயநிதி.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கலகத்தலைவன்' என்ற திரைப்படம் வரும் 18ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், ஆரவ் நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் ஒரு பேட்டியில் கூறியதாவது: இந்த படத்தில் பங்காற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் எனது நன்றிகள். மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை செதுக்கி இருக்கிறார். அவர் நிறைய நேரம் செலவழித்து, சிறப்பான காட்சிகளை தொகுத்து உருவாக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு பெரிய உழைப்பும், அர்ப்பணிப்பும் கொடுத்துள்ளோம். இயக்குநர் மகிழ் திருமேனி சிறப்பான படத்தை உருவாக்கி கொடுத்துள்ளார்.
நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்றுதான் திருமணத்திற்கு முன் வாக்குறுதி கொடுத்தேன். நான் நடிக்கப் போகிறேன் என்று என் மனைவி கிருத்திகாவிடம் கூறியபோது என்ன திடீரென என்று கேட்டார். நடிக்க மாட்டேன் என்று கூறவில்லையே என்று சொல்ல, கிருத்திகாவும் நான் நடிப்பதற்கு சம்மதித்தார். அப்பா எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அம்மாவிற்குதான் நான் நடிப்பது பிடிக்கவில்லை.
கலகத் தலைவன் திரைப்படத்தில் ஒரு முத்த காட்சி இருந்தது. இயக்குநர் அந்தக் காட்சியை கேமரா ஆங்கிளில் ஏமாற்றி எடுப்பார் என்று நினைத்தேன். ஆனால், படப்பிடிப்பின்போது உண்மையாக கதாநாயகிக்கு முத்தம் கொடுக்கச் சொன்னார். நான் முடியவே முடியாது என்று மறுத்ததால் வேறு வழியின்றி கேமரா கோணத்தில் மாற்றி எடுத்தார். படத்தில் நான் வரும் காட்சிகள் குறைவாகத்தான் இருக்கும். ஆரவ்விற்குதான் நிறைய காட்சிகள் இருக்கிறது என்று பல சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார் உதயநிதி.
இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கிய படம் என்றாலே, சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மகிழ்திருமேனி படம் எப்படி இருக்கும் என தெரிந்த ரசிகர்களுக்கு குறைவில்லாமல் இந்த படத்தை கொடுத்துள்ளார். ஒரு மிகப்பெரிய சமூக விரோதக் கூட்டம் நடமாடிக் கொண்டிருக்கும் நிலையில் அந்த கூட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அலசும் இந்த படம். , நான் நடித்ததிலேயே வயலன்டான படம் என உதயநிதி கூறியுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2