ரஜினியை இயக்கும் லோகேஷ்! தயாரிப்பது இவங்களா?
ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய படத்தை தயாரிப்பது இந்த நிறுவனமா?
HIGHLIGHTS
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அந்த தகவலை உறுதிப்படுத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது சன்பிக்சர்ஸ் நிறுவனம். இந்த படமும் மாஸ் ஹீரோக்கள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெய்லர் திரைப்படம், பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தி பயங்கரமான வசூலைப் பெற்று வருகிறது. 600 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை செய்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இந்த படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
படத்தில் ரஜினிகாந்த் மட்டுமின்றி மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரின் நடிப்பும் மாஸாக இருந்தது. அதுமட்டுமின்றி தமன்னாவின் காவாலா பாடலுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில், ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இதேநேரம் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்திலும் ரஜினிகாந்த் போர்சன்களின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து த செ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பேனரில் இந்த படம் தயாராக இருக்கிறது. இந்த படம்தான் ரஜினிகாந்தின் கடைசி படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜுடன் ரஜினிகாந்த் இணையும் புதிய படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இருவரும் இந்திய சினிமாவின் மிகப் பெரிய ஆளுமைகள் என்பதால் இருவரும் இணையும் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதேநேரம் இப்போது இந்த படத்தில் ரஜினிகாந்துடன் யாஷும் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படம் எல்சியூவில் வராது என்றும் நம்பப்படுகிறது. இதற்கான அறிவிப்பை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.