/* */

இந்தியாவே ஆட்டம் காணும்... அமிதாப் பச்சன், ரஜினியுடன் தமிழில் இணையும் மாஸ் நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் அமிதாப் பச்சன் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர்களுடன் மாஸ் நடிகர் ஒருவரும் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

இந்தியாவே ஆட்டம் காணும்... அமிதாப் பச்சன், ரஜினியுடன் தமிழில் இணையும் மாஸ் நடிகர்!
X

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் அமிதாப் பச்சன் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர்களுடன் மாஸ் நடிகர் ஒருவரும் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெய்லர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. டப்பிங் வேலைகள் தற்போது துவங்கியுள்ளன. ரஜினிகாந்துடன் இந்த படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இதேநேரம் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்திலும் ரஜினிகாந்த் போர்சன்களின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து த செ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த படம்தான் ரஜினிகாந்தின் கடைசி படம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜுடன் ரஜினிகாந்த் இணையும் புதிய படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இருவரும் இந்திய சினிமாவின் மிகப் பெரிய ஆளுமைகள் என்பதால் இருவரும் இணையும் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதேநேரம் இப்போது இந்த படத்தில் ரஜினிகாந்துடன் யாஷும் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து ரஜினிகாந்தும் இந்த மாதிரி ஒரு வெற்றியைப் பெற திட்டமிட்டு வருகிறார். அந்த படத்துக்காக இந்தியா முழுக்க அனைவருடனும் நடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறாராம். அடுத்து டாம் குரூஸ் மாதிரி ஹாலிவுட் நடிகர்களை படத்தில் எடுத்து போடுவாரோ என இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.

Updated On: 18 Jun 2023 8:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...