'வாடிவாசல்' படத்தில் இணைந்த'அவதார்' தொழில்நுட்பக்குழு - சூர்யா ரசிகர்கள் 'குஷி'
Suriya Join With Avatar Team- ‘அவதார்’, ‘காட்ஸில்லா’ படங்களில் பணிபுரிந்த WETA டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனம், ‘வாடிவாசல்’ படத்தில் கை கோர்த்துள்ளதால், ஜல்லிக்கட்டு காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்களிடையே இப்போதே அதிகரித்து வருகிறது.
HIGHLIGHTS
Avatar Graphics team joined up for Suriya's Vaadivaasal, Suriya Join With Avatar Team- வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த 'ஜெய்பீம்' திரைப்படத்தை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டினர். மேலும், அவர் 'சூரரைப்போற்று' படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார்.
தற்போது சூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தீவரமாக நடந்து வருகிறது. இதையடுத்து சூர்யா, இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து, 'வாடிவாசல்' என்ற படத்தில், நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
வெற்றிமாறன் ஏற்கனவே இப்படத்தின் ஆரம்பகட்ட பணியை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவதார், காட்ஸில்லா போன்ற படங்களில் பணியாற்றிய VFX நிறுவனமே, இப்படத்திற்கும் பணியாற்ற உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால், 'வாடிவாசல்' படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர், சிறந்த நடிகராக படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி ரசிகர்களின் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராக நடிகர் சூர்யா கலக்கி வருகிறார். கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த மெகா ஹிட் பிளாக்பஸ்டரான 'விக்ரம்'. இந்தப் படத்தின் இறுதி காட்சியில், சில நிமிடங்களே தோன்றினாலும், தனது 'ரோலக்ஸ்' கதாபாத்திரத்தால், திரையரங்குகளை அதிர வைத்ததார்.
அடுத்ததாக, தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜயுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை தற்போது இயக்கி வரும் நிலையில், இந்த தளபதி 67 திரைப்படம் லோகேஷ் கனகராஜின் LCUல் இடம்பெறும் என்றால், 'நேருக்கு நேர்' படத்திற்கு பிறகு தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா நேருக்கு நேர் மோதும் அதிரடி திரைப்படமாக தளபதி 67 இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முன்னதாக இயக்குனர் சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' திரைப்படத்தில், சூர்யா தற்போது நடித்து வருகிறார். பிரம்மாண்டமான திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை, மையப்படுத்தி தயாராகும் 'வாடிவாசல்' திரைப்படத்தில் அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கிறார்.
கலைப்புலி.S.தாணு தயாரிப்பில் உருவாகும் 'வாடிவாசல்' திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் மாடுபிடி வீரர்களுடன் இணைந்து நடிகர் சூர்யா மாடுபிடிக்கும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். மேலும், 'வாடிவாசல்' படத்திற்காக தொடர்ந்து பல விதமான மாடு பிடிக்கும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டும், மாடுபிடி பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
வெகு விரைவில் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது 'வாடிவாசல்' திரைப்படத்தின் VFX கிராபிக்ஸ் பணிகளுக்காக ஹாலிவுட் முன்னணி கிராபிக்ஸ் நிறுவனமாக அவதார், மார்வெல் திரைப்படங்கள் காட்ஸில்லா மற்றும் கிங்காங் ஆகிய படங்களுக்கு பணியாற்றிய WETA டிஜிட்டல் நிறுவனம் கைகோர்த்து இருப்பதாக தற்போது தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஜல்லிக்கட்டு காட்சிகளை, 'வாடிவாசல்' படத்தில், ஒரிஜினலாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், மாடுபிடி காட்சிகளை தத்ரூபமாக இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். இதற்காக, ஒரிஜினல் மாடுகளை கொண்டு படம்பிடிக்க உள்ளதால், வேற லெவலில் இந்த படம் இருக்கும் என்று, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு, இப்போதே எகிறத் துவங்கி விட்டது.