/* */

சூப்பர் சிங்கர் ஜோடிக்கு குவிகிறது ரசிகர்கள் வாழ்த்து... காரணம் என்ன தெரியுமா?

Super Singer Ajay Krishna Wife Pregnant- சூப்பர் சிங்கர் ஜோடி அஜய் கிருஷ்ணா - ஜெஸி ஜோடிக்கு 'வீட்டுல விசேஷம்'. அட, ஆமாங்க, இவர்கள் வீட்டில், விரைவில் 'குவா குவா' சத்தம் கேட்க போகிறது.

HIGHLIGHTS

சூப்பர் சிங்கர் ஜோடிக்கு குவிகிறது ரசிகர்கள் வாழ்த்து... காரணம் என்ன தெரியுமா?
X

super singer ajay krishna wife pregnant-  விரைவில் பெற்றோராக உள்ள மகிழ்ச்சியில் அஜய் கிருஷ்ணா - ஜெஸி தம்பதி.

Super Singer Ajay Krishna Wife Pregnant-கணவர் அஜய் கிருஷ்ணாவின் பிறந்த நாள் அன்று இந்த தகவலை ரசிகர்களுடன் ஜெஸி ஷேர் செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. அந்த சூப்பர் சிங்கர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. இவர் தனது குரலை மாற்றி உதித் நாராயணன் போல் பாடுவது அனைவரையும் வெகுவாக கவர்ந்துவிடும்.


அஜய் கிருஷ்ணா வீட்டிற்கு செல்லப்பிள்ளை. இவருக்கு மூன்று அக்காக்கள் இருக்கிறார்கள். சமீபத்தில்தான் இவருடைய அம்மா இறந்துவிட்டாராம். அஜய் கிருஷ்ணாவிற்குள் பாட்டு திறமை இருப்பதை அவருடைய இரண்டாவது அக்கா தான் கண்டுபிடித்து இருக்கிறார். தன்னுடைய தம்பியின் திறமையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று ஊர் திருவிழாக்கள், பங்ஷன்களில் இவரை பாட்டு பாட வைத்திருக்கிறார்.

அஜய் கிருஷ்ணாவிற்குள் இருந்த பாட்டு திறமையை, வீட்டிலிருந்தவர்கள் பல போராட்டங்களுக்கு பிறகு தான் வெளியே கொண்டு வந்திருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான, 'சூப்பர் சிங்கர்' ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். ஆனால் அப்போது கூட இவர் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. ஆனால் அடுத்த சீசனில் இவர் ஜூனியருக்காக சப்போர்ட் செய்ய போகும்போது, இவர் 'ரோஜா ரோஜா' பாடல் நேரத்தில் வைரலாக பரவி வந்தது. இவர் பாடகராக இருக்கும் போது, இவர் ஜெஸி என்பவரை காதலித்து உள்ளார்.

அஜய், 'கண்ணான கண்ணே கலங்காதடி' என்னும் பாடலை பாடி instagram பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்து ஜெஸி இந்த பாடல் நன்றாக இருக்கிறது என்று இவருக்கு பதில் அனுப்பி இருந்தார். அப்போது அஜய் அதற்கு, 'தேங்க்யூ' சொல்லிவிட்டு ஜெஸியின் டிபியை பார்த்திருக்கிறார். அதில் அவருடைய நீளமான தலைமுடியை பார்த்து அஜய்க்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது. ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நண்பர்களாக தான் பழகி இருக்கிறார்கள் .பின்பு காதலர்களாக மாறி இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வெகு விமர்சனமாக திருமணத்தை முடிந்து தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில், அஜய் பிறந்த நாளான இன்று, அவருக்கு வாழ்த்து கூறி அவருடைய மனைவியான ஜெஸி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், நான் தொலைக்காட்சியில் பார்த்த சிறந்த பாடகருக்கும், சிறந்த காதலனுக்கும், சிறந்த வருங்கால கணவருக்கும், சிறந்த கணவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் எடுத்த முடிவுகளிலேயே மிகச் சிறந்த முடிவு நீங்கள் தான் என்பதை நீங்கள் தொடர்ந்து எனக்கு உணர்த்துவீர்கள். ஒன்றாக சேர்ந்து சிறந்த அம்மா அப்பாவாக இருப்போம். எனது சிறந்த பாதையில் பிறந்த நாளை விட சிறந்த சந்தர்ப்பத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு மதம் என்பதால், இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மத்திற்காக காத்திருந்து பின்பு திருமணம் செய்துக் கொண்டனர். இந்து முறைப்படியும் கிறிஸ்துவ முறைப்படியும் அரங்கேறிய இவர்களின் திருமணத்திற்கு விஜய் டிவி பிரபலங்கள் பலரும் சென்று இருந்தனர்.


திருமணம் முடிந்த கையோடு இருவரும் விஜய் டிவி, 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் சீசன் 4' நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டனர். ஆனால் தனிப்பட்ட காரணங்களால் இருவரும் 2வது வாரமே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்கள். இப்படி இருக்கையில் தற்போது ஜெஸி கர்ப்பமாக இருக்கிறார். இவர், இன்ஸ்டா பக்கத்தில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். கணவர் அஜய் கிருஷ்ணாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, ' புதிய வருகைக்காக காத்திருக்கிறோம் உங்களின் ஆசீர்வாதம் வேண்டும்,' என பதிவு செய்து இருக்கிறார்.

அதுமட்டுமில்லை, நேற்றைய தினம் அஜய் கிருஷ்ணாவின் பிறந்த நாளும் கூட. கணவரின் பிறந்த நாள் அன்று இந்த சந்தோஷமான விஷயத்தை ரசிகர்களுடன் ஜெஸி ஷேர் செய்து இருக்கிறார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 14 Oct 2022 11:33 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது