நடிகர் பிரஷாந்த் மீது இலங்கை பெண் போலீசில் புகார்
prashanth thyagarajan latest news - நடிகர் பிரஷாந்த் மீது இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகாரளித்துள்ளார்.
HIGHLIGHTS
prashanth thyagarajan latest news -அழகு, நடனம், நடிப்பு, குடும்பப்பிண்ணணி, சிறந்த படங்கள், அருமையான பாடல்கள் என 90களில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்டிருந்த நடிகர் பிரஷாந்த். இவர் நடிப்பில் தற்போது 'அந்தகன்' படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தை பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். விரைவில் 'அந்தகன்' படம் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
actor prashanth latest news
இந்த நிலையில், நடிகர் பிரஷாந்த் ரூ.10 லட்சம் பண மோசடி செய்துள்ளதாக இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்பவர் சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குமுதினி சுவிஸர்லாந்து விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இதனைத்தொடர்ந்து, அந்த பெண் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக, நடிகர் பிரஷாந்த் போலீசில் புகாரளித்துள்ளார். புகாரின்பேரில் இருதரப்பினரிடையே போலீசார் விசாரித்து வருகின்றனர்.