ஸ்ருதியின் கணவர் மரணத்துக்கு இப்படி ஒரு காரணமா? இளைஞர்களே உஷார்!
சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மரணத்துக்கு காரணம் மாரடைப்பு என்றும் அவருக்கு 30 வயதுக்குள் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது
HIGHLIGHTS
சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் மரணத்துக்கு காரணம் மாரடைப்பு என்றும் அவருக்கு 30 வயதுக்குள் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது எனவும் திடுக்கிடும் காரணங்கள் வெளியாகியுள்ள நிலையில், இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
50, 60 வயதைக் கடந்தவர்களுக்கு வரும் வியாதிகளும் கோளாறுகளும் இப்போதே 30 வயதை எட்டும் முன்பே வந்து மனிதர்களை கொத்துக் கொத்தாக விழுங்கிக் கொண்டிருக்கிறது. இதனை பல்வேறு சம்பவங்களிலும் நாம் பார்த்திருக்கிறோம்.
இதய நிபுணர்களுக்கே இதய நோய் காரணமாக மரணம் நிகழ்வதும், ஜிம் பயிற்சியாளர்களுக்கே ஹார்ட் அட்டாக் வருவதும் என நாம் இதயத்தை பேணி பாதுகாத்தால் உடற்பயிற்சி செய்தால் ஆரோக்யமாக வாழலாம் என சிறுவயதிலிருந்தே நமக்கு கற்பிக்கப்பட்ட பாடங்கள் அனைத்தும் பொய்யாகிறதே என ஒரு புறம் வேதனையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
திருமுருகன் இயக்கத்தில் சன்டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரில் நடித்த ஸ்ருதி சண்முகப்பிரியாவுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது. திருமணமான ஒரே வருடத்துக்குள் தன் கணவரை இழந்திருக்கிறார் ஸ்ருதி.
கோவையைச் சேர்ந்த ஸ்ருதி சண்முகப்பிரியாவுக்கும் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது. உடற்பயிற்சி நிபுணரான அரவிந்த் தன் உடலை பேணிக் காப்பதில் சிறந்தவராக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தான் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும் வென்றவராக இருக்கிறார்.
வளசரவாக்கத்தில் ஒரு வீட்டில் கடந்த ஒரு வருடமாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஸ்ருதி அப்படியே நொறுங்கிவிட்டார். அவர் மட்டுமின்றி இதனை அறிந்த அவர்களது நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
இதனையடுத்து அவருடைய வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. காலையில் ஸ்ருதி இறந்த தனது கணவர் குறித்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் பிரிந்தது உடல் மட்டும் தான். ஆனால் உங்கள் ஆன்மாவும் மனமும் என்னை சூழ்ந்து இப்போதும் என்றென்றும் பாதுகாக்கிறது. நீங்கள் நிம்மதியாக இருங்கள் அன்பே, உங்கள் மீதான எனது அன்பு இப்போதும் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.