என்னடா இது! ஷங்கர் படத்துக்கு வந்த சோதனை?
Shankar New Movie- ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகிவரும் 'ஆர்சி 15' படத்தின் படப்பிடிப்பு பெண் அதிகாரியால் நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
HIGHLIGHTS
Shankar New Movie- ரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா ஹீரோவாக நடிக்கும் படம் 'ஆர்சி 15' . இந்த படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடித்து வருகிறார். மேலும் முக்கிய வேடத்தில் அஞ்சலி, ஜெயராம், ஸ்ரீகாந்த், நாசர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.170 கோடி என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென அந்த பகுதிக்கு வந்த நகராட்சி பெண் அதிகாரி அகுலா ஸ்ரீவாணி என்பவர் பள்ளிக்கூடத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தடை விதித்தார்.
பள்ளி நடந்துகொண்டிருக்கும்போது படப்பிடிப்பு நடத்தினால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்றும், எனவே பள்ளியில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என கூறினார். அதுமட்டுமல்லாது, படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியையும் கடுமையாக சாடினார்.
இதனையடுத்து படக்குழுவினர் தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்தி உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் மற்ற காட்சிகளை வேறு பள்ளியில் காட்சியை எடுக்கலாமா அல்லது பள்ளி போன்ற 'செட்' அமைத்து படப்பிடிப்பு நடத்தலாமா என படக்குழுவினர் யோசித்து வருகிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2