சீரியலில் இருந்து சினிமாவுக்கு மாறிய 'ஜாக்பாட்' நடிகைகள்
Shabana Serial Actress -'டிவி' சீரியல்களில் நடித்து வந்த இரண்டு நடிகைகளுக்கு, அதிர்ஷ்டவசமாக ஒரே படத்தில் அறிமுகமாகும், 'ஜாக்பாட்' வாய்ப்பு கிடைத்துள்ளது.
HIGHLIGHTS
Shabana Serial Actress -- சின்னத்திரை துவங்கப்பட்ட காலத்தில், சினிமாவில் வாய்ப்பில்லாத பல நடிகைகள் சீரியல் பக்கம் வந்துகொண்டிருந்த நிலை மாறி, தற்போது சீரியலில் என்ட்ரி ஆகி அதன் மூலம் திரையில் அறிமுகமாகும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் சீரியல் நடிகைகளாக ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும், திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஓடி நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் 'செம்பருத்தி'. இந்த சீரிலில் முக்கிய கேரக்டரான 'பார்வதி'யாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஷபானா. தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள இவர், இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர்.
தற்போது இந்த சீரியல் முடிவடைந்துவிட்ட நிலையில், ஷபானா அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது அவர், திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பகையே காத்திரு' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், அவருடன் இணைந்து நடிகை ரேஷ்மா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜீ தமிழின் 'பூவே பூச்சூடவா' தொடரின் மூலம் பிரபலமான நடிகை ரேஷ்மா, தற்போது கலர்ஸ் தமிழின் 'அபி டெய்லர்' சீரியலில் நடித்து வருகிறார். ஒரே சேனலில் வெவ்வேறு சீரியலில் நடித்து வந்த இவர்கள், தற்போது ஒரே படத்தின் மூலம் திரைத்துரையல் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2