விஜய் தேவரகொண்டாவுடன் ஆலப்புழா சென்ற சமந்தா!
வரும் செப்டம்பர் 1ம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது. அதற்கு நாட்கள் அதிகம் இருப்பதால் பொறுமையாக வேலை செய்து நிதானமாக படத்தை எடுத்து வருகின்றனர்.
HIGHLIGHTS
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் ஒரே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. தற்போது இவர் நடிப்பில் சாகுந்தலம் படம் திரைக்கு வர காத்திருக்கிறது. விஜய் தேவரகொண்டாவுடன் இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழிலும் சரி தெலுங்கிலும் சரி முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பல வெற்றிப்படங்களைத் தந்தவர் சமந்தா. நடிகர்களுக்கு நிகராக இவரது படங்களையும் திரையரங்கில் எதிர்பார்க்கும் அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் அதிகம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா. வித்தியாசமான படமாக இருந்தாலும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
இதனையடுத்து இவர் நடிக்கும் சாகுந்தலம் திரைப்படம் இந்த ஆண்டு திரைக்கு வர காத்திருக்கிறது. மேலும் இவர் தற்போது விஜய் தேவரகொண்டா ஜோடியாக குஷி படத்தில் நடிக்கிறார்.
தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக கொஞ்சம் திரைத்துறையிலிருந்து ஒதுங்கி இருந்தார் சமந்தா. சில மாதங்களே ஓய்வில் இருந்த இவர் ஜிம் சென்று பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தார். பின் தனது உடல்நலனை சரியாக்கிக் கொண்டு திரும்பி நடிக்க வந்துவிட்டார்.
ஹிந்தியில் உருவாகி வரும் இணையத் தொடர் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சமந்தா. ஏற்கனவே ஃபேமிலி மேன் தொடரில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். தற்போது இவர் நடித்துவரும் குஷி படத்துக்காக ஆலப்புழா சென்றிருக்கிறார்.
விஜய் தேவரகொண்டா, சமந்தா இணைந்து நடிக்கும் ஒரு பாடல் காட்சி கேரள மாநிலம் ஆலப்புழாவில் படமாக்கப்படுகிறது. வண்ணமயமான பாடல் காட்சியாக இது அமையும் என்று கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா இணைந்துள்ள இந்த படத்தை ஷிவா நிர்வாணா இயக்கி வருகிறார். கடந்த ஆண்டே இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிவிட்ட நிலையில், இது மிகவும் வித்தியாசமான காதல் கதை என்று கூறப்பட்டு வருகிறது. ஹேஷம் அப்துல் வஹாப் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி சர்மா, லட்சுமி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த், சரண்யா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
பா ரஞ்சித்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான முரளி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
வரும் செப்டம்பர் 1ம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் படக்குழு இறங்கியுள்ளது. அதற்கு நாட்கள் அதிகம் இருப்பதால் பொறுமையாக வேலை செய்து நிதானமாக படத்தை எடுத்து வருகின்றனர்.