/* */

சமந்தாவுக்கு கோவில்.. திறப்பு விழா எப்போது தெரியுமா?

சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்காக கோவில் கட்டியுள்ளார். அந்த கோவிலின் திறப்பு விழாவுக்கு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

சமந்தாவுக்கு கோவில்.. திறப்பு விழா எப்போது தெரியுமா?
X

சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்காக கோவில் கட்டியுள்ளார். அந்த கோவிலின் திறப்பு விழாவுக்கு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா, தனது வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு பட வாய்ப்புகளை இழந்தார். இதனால் தனது நோய்க்கு மருத்துவம் பார்த்து நோயின் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தனது சூப்பரான நடிப்பின் மூலம் அசத்திய சமந்தா தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, வட இந்தியா என பல ரசிகர்களைக் கொண்டுள்ளார். நடிப்பு மட்டுமின்றி பல்வேறு பொது சேவைகளையும் அவ்வப்போது செய்து வருகிறார். இந்நிலையில் நோயிலிருந்து மீண்டு வந்துள்ள அவரை ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பார்க்கின்றனர். அவருக்கு ரசிகர் ஒருவர் கோவில் கட்டி கும்பிடத் தயாராகிவிட்டார்.

ஆந்திராவின் குண்டூர் அருகே இருக்கும் பாபட்லா மாவட்டத்தில் அலபாடு கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவர் சமந்தாவின் தீவிரமான ரசிகர். அவரது படங்களுக்கு முதல் நாள் முதல் ஷோ செல்லும் அளவுக்கு தீவிரமானவர். இவ்வளவு ஏன் சாகுந்தலம் படத்தைக் கூட 15 முறைக்கு மேல் பார்த்திருக்கும் அளவுக்கு மன திடம் வாய்ந்த ரசிகர்.

சமந்தா, பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளைச் செய்து வருகிறார். இதன்மூலம் தனக்கு அவர் மீதான மதிப்பு கூடிய நிலையில் அவருக்கு கோவில் கட்ட நினைக்க சந்தீப், தனது வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி அங்கு கோவில் கட்டியுள்ளார். கிட்டத்தட்ட அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், கோவில் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்து நாளை திறப்பு விழா நடத்த இருக்கிறாராம். இதற்காக ரசிகர்கள் அனைவரையும் கோவிலுக்கு வந்து செல்லுமாறு அழைத்துள்ளார்.

Updated On: 23 Sep 2023 4:14 PM GMT

Related News