ரஜினியின் அரசியல் என்ட்ரி... கிங் மேக்கராக ஆசைப்படுகிறாரா ரஜினி?
ரஜினிகாந்தின் அரசியல் ஆசை இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
HIGHLIGHTS
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றியைக் கொண்டாடாமல் இமயமலைக்கு போனதும், அதன்பிறகு அவர் யார் யாரைச் சந்திக்கிறார் என்பதும் தமிழகத்தில் குறிப்பாக அரசியல் வட்டாரத்தில் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.
அரசியலுக்கு வரேன் வரேன் என்று கூறிக்கொண்டே பின் தனது உடல் நிலை காரணமாக அரசியலுக்கு வரப் போவதில்லை எனும் கடினமான முடிவை அறிவித்தார் ரஜினிகாந்த். அதன்பிறகு போதிய பாதுகாப்பு வசதிகளுடன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தில் நடித்து 1 1/2 வருடங்களுக்குப் பிறகு தான் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. அந்த அளவுக்கு மிகவும் கட்டுக்கோப்பாகவே ரஜினிகாந்த் இருந்து வருகிறார்.
இப்போது நேரடி அரசியலுக்கு வரவில்லை என்றாலும் தான் விரும்பும் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என திட்டமிட்டுள்ளார் என்றும் அதற்கு கிங் மேக்கராக திகழ்வார் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது யார மீட் பண்ண போறார்னு தெரிஞ்சா ஒருவேள நான் சொல்றது கரெக்ட்டுதான்போலனு நீங்களே சொல்வீங்க. அப்படித்தான் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.
ஜெயிலர் படத்தின் வெற்றியை இமயமலையிலிருந்தும் மகிழ்ச்சியாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறார் ரஜினிகாந்த். அவர் இமயமலைக்கு சென்றிருந்தாலும் இங்குள்ள கள நிலவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டுதான் இருக்கிறாராம். ரஜினியின் முந்தைய படங்கள் பெருதாக போகாத நிலையில், நெல்சன் மேல் நம்பிக்கை வைத்து இந்த படத்தை கொடுத்ததற்கு பெரிய வசூல் வேட்டையே நடத்திக்கொண்டிருக்கிறது இந்த படம். இதுக்கு பின்னாடி வெறும் வசூல் மட்டும் இல்லையாம் இதில் பெரிய அரசியலே ஒளிஞ்சி இருக்குன்னு சொல்றாங்க.
ரஜினிகாந்த் இமயமலைக்கு போறேன்னு சொல்லிட்டு யார் யாரைச் சந்தித்திருக்கிறார் என்று தெரிந்தால் நீங்களே ஷாக் ஆவீர்கள். பாஜகவோட முக்கியமான தலைவர்களில் ஒருவரான சிபி ராதாகிருஷ்ணன் உட்பட பல தலைவர்களையும் துறவிகளையும் சந்திக்கிறாராம் ரஜினி.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் மீட் பண்ணப் போகிறாராம். அடுத்து மோடி, அமித்ஷா கூடவும் தனியாக மீட்டிங் ஒன்று ரகசியமாக நடக்க இருக்கிறதாம். இப்படி ரஜினி போடுகிற கணக்கைப் பார்த்தால் ஒருவேளை அடுத்த தேர்தலில் கிங் மேக்கராக இருக்க ஆசைப்படுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தேர்தல் நெருங்குகிற சமயத்தில் பிரதமர் மோடி மற்றும் அவரது சகாக்களைப் பற்றி பேசி அவர்கள் நன்றாக ஆட்சி செய்கிறார்கள், ராமர் ஆட்சி புரியுறார்கள் என்று வாய்ஸ் கொடுத்தால் ரஜினிக்கு இருக்கும் பவரை இந்தியா பார்க்கும். நாமளும் பொறுத்திருந்து பார்க்கலாம்.