/* */

லட்சங்களில் இருந்து, கோடிகளை தொடுவது எப்போது? ஏக்கத்தில் தவிக்கும் ப்ரியா பவானி சங்கர்

Priya Bhavani Shankar Salary- முன்னணி ஹீரோக்களுடன் நடித்தும், லட்சங்களில் இருந்து, தனது சம்பளம் கோடி ரூபாயை தொடவில்லையே, என்ற ஏக்கத்தில் தவிக்கிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

HIGHLIGHTS

லட்சங்களில் இருந்து, கோடிகளை தொடுவது எப்போது? ஏக்கத்தில் தவிக்கும் ப்ரியா பவானி சங்கர்
X

priya bhavani shankar salary-  நடிகை ப்ரியா பவானி சங்கர்

Priya Bhavani Shankar Salary- சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்த ப்ரியா பவானி சங்கர், தற்போது வெள்ளித்திரையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இந்தியன் 2, பத்து தல உட்பட பல திரைப்படங்களில் இவர் 'பிஸி'யாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருந்தும், இவர் தற்போது கடும் அப்செட்டில் இருக்கிறார். ஏனென்றால், முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கும் நாயகிகளுக்கு, தற்போது கோடி கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சினிமாவிற்கு வந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும், இவருக்கு சில லட்சங்கள் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

அதிலும் இவர் கார்த்தி, தனுஷ், அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்படி இருந்தும் இவருடைய சம்பளத்தை உயர்த்த, எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை. அது மட்டுமல்லாமல் இரண்டாவது, மூன்றாவது ஹீரோயின் போன்ற கேரக்டர்களில் நடிக்க மட்டுமே இவருக்கு அழைப்பு வருகிறது.


சில நிமிடங்கள் மட்டுமே தலைகாட்டும் கேரக்டரில் நடிப்பதால்தான், இவருடைய சம்பளமும் உயராமல் அப்படியே இருப்பதாக இவர் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். மேலும் தனக்கு சம்பளம் அதிகமாக வேண்டும் என்று கேட்டால், வேறு ஹீரோயினை தயாரிப்பாளர்கள் தேடி போய் விடுகிறார்கள்.

அதனால் கிடைத்த வரை லாபம் என்று அவர் சிறு சிறு கதாபாத்திரங்களை கூட ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் சிறிது நேரம் மட்டுமே, இவருடைய காட்சிகள் இருந்தது.

இதனால் மன உளைச்சலில் இருக்கும் ப்ரியா பவானி சங்கர், இனிமேல் கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறார். அப்போதுதான், தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு அதிகப்படுத்த முடியும் என்று அவர் முடிவு செய்து இருக்கிறார்.


இன்றைய சினிமா உலகில், நடிக்க வந்த ஓரிரு ஆண்டுகளில், சில நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி விடுகின்றனர். சிவாஜி, எம்.ஜி.ஆர் நடித்த காலகட்டத்தில் ஒற்றை இலக்க லட்சங்களை சம்பளமாக பெறுவதே, அன்றைய நடிகைகளுக்கு பெரும் கனவாக இருந்தது. அதிலும் படம் முழுக்க, நடிகைகள் இடம்பெற்ற காட்சிகளும் இருந்தது. ஆனால், இன்று முன்னணி கதாநாயகிகள் சிலர், பாடல் காட்சிகள் மற்றும் சில காட்சிகளில் நடித்தாலே, கோடிக்ககணக்கில் சம்பளம் வந்துவிடுகிறது.

சில நடிகைகள், எத்தனை கோடி சம்பளமாக கேட்டாலும், கொட்டிக்கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால், ப்ரியா பவானி சங்கர் போன்ற வளர்ந்துவரும் இளம்நடிகைகளுக்கு, சம்பள உயர்வு என்பது, அவர் நடிக்கும் படங்களில், அவருக்கு கொடுக்கப்படும் கேரக்டர்களின் மூலமே, அது தீர்மானிக்கப்படும். எனவே, கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடிக்க, ப்ரியா பவானி சங்கர் எடுத்திருக்கும் முடிவே சரியானது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Oct 2022 8:42 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்