/* */

பொன்னியின் செல்வன் முதல் பாடல்! வெளியானது அறிவிப்பு!

பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாடல்களை வெளியிடுவதற்கு முன்பாக ஒரு சிங்கிள் பாடலை வெளியிடுகிறார்களாம். அதுவும் இந்த வாரத்தில் ரிலீஸ் ஆகிறதாம்.

HIGHLIGHTS

பொன்னியின் செல்வன் முதல் பாடல்! வெளியானது அறிவிப்பு!
X

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாடல்களை வெளியிடுவதற்கு முன்பாக ஒரு சிங்கிள் பாடலை வெளியிடுகிறார்களாம். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.


மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த பொன்னியின் செல்வன் படம் கடந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம், வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் படத்தின் புரமோசன் பணிகளைத் திட்டமிட்டு முடிப்பது, ஒரு மாத காலத்துக்கு முன்பே பயணங்களைத் திட்டமிடுவது என படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது முதல் அப்டேட்டாக பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி தெரியவந்துள்ளது.


முதலில் ஜெயம்ரவிக்கான காதல் பாடல் கடந்த மார்ச் 12ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களும் காத்திருந்தனர். அருள்மொழி வர்மன் - வானதி இருவருக்குமான காதல் பாடலாக இந்த பாடல் அமையும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த பாடலுக்கு பதில் முதலில் அகநக எனும் பாடலை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

மார்ச் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த பாடல், மெலோடியாக ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் குரலில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து நிச்சயம் பாடல் ஹிட் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

மார்ச் மாதம் 29ம் தேதி இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இந்நிகழ்வு வரும் ஏப்ரல் 5ம் தேதிக்கு மாற்றப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் நடிகர்களுக்கும் ஷூட்டிங் மிக ஜோராக நடந்து வருகிறது.


கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பிலும், ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பிலும் இருக்கிறார்கள். மேலும் ஜெயம் ரவியும் தனது சைரன் படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். கார்த்திக்கு ஜப்பான், விக்ரமுக்கு தங்கலான், திரிஷாவுக்கு லியோ என மிக பிஸியாக இருப்பதால் இவர்களை விழாவுக்கு அழைக்க திட்டமிட்டிருக்கும் தயாரிப்பு தரப்பு ஏப்ரல் 5ம் தேதிக்கு மாற்றியுள்ளது. அனைவரும் ஏப்ரல் மாதத்துக்குள் மற்ற படங்களிலிருந்து விடுபட்டு இந்த படத்துக்கான புரமோசன் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

கொச்சி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மலேசியா, துபாய் உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும் இந்நகரங்கள் பட்டியலில் நியூயார்க், லண்டன் உள்ளிட்ட இன்னும் சில நகரங்களும் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. இம்முறை பொன்னியின் செல்வன் கொஞ்சம் பெரிய லெவலில் வெளியிடப்படவிருக்கிறது. இதற்காக பொன்னியின் செல்வன் நடிகர், நடிகைகளிடம் 19 நாட்கள் கால்ஷீட் வாங்கி வைத்திருக்கிறாராம் மணிரத்னம்.

Updated On: 18 March 2023 3:10 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  2. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  6. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  7. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  9. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?