/* */

நடிகர் சூர்யா வீட்டுக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு

நடிகர் சூர்யாவின் சென்னை வீட்டிற்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நடிகர் சூர்யா வீட்டுக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு
X

 நடிகர் சூர்யா

நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படம், வரவேற்பை பெற்றது. எனினும், இதில் வன்னியர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

வன்னியர் சங்கம் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிராக, அந்த அமைப்பு சார்பில், வக்கீல் நோட்டீசும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பாமக மற்றும் வன்னியர் சங்கம் தரப்பில், நடிகர் சூர்யாவுக்கு எதிரான கருத்துகள் வெளியான போதும், திரையுலக பிரபலங்கள், சில அரசியல் தலைவர்கள், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இச்சூழலில், நடிகர் சூர்யாவின் சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டிற்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தரப்பில் பாதுகாப்பு எதுவும் கேட்கப்படவில்லை என்றும், அதே நேரம், உளவுத்துறை தகவலின் அடிப்படையில், அரசே இந்த பாதுகாப்பை வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூரியாவின் தந்தை நடிகர் சிவகுமார், தம்பி கார்த்தி ஆகியோரும், இதே வீட்டில்தான் குடும்பத்துடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!