/* */

Pei Padam Pei Padam-பேய் படம் பார்க்க ஆசையா? இதெல்லாம் பாருங்க..!

கற்பனைக்கு எட்டாத சில விஷயங்கள் தத்ரூபமாக காட்டப்படும்போது அது ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.அந்த வகையில் பேய் படங்களும் அடங்கும்.

HIGHLIGHTS

Pei Padam Pei Padam-பேய் படம் பார்க்க ஆசையா? இதெல்லாம் பாருங்க..!
X

Pei Padam Pei Padam-பேய் படம் (கோப்பு படம்)

Pei Padam Pei Padam

பேய் என்பது ஒரு கற்பனையான பயங்கரம் என்பது நமக்குத் தெரிந்தாலும், பலர் இன்னும் பேய் இருப்பதாகவே நம்புகின்றனர். பேய் பற்றி சுவாரஸ்ய சம்பவங்களும் பல உள்ளன. பேயை படம் எடுத்தால் நன்றாக வசூல் செய்கிறது. பல ஆங்கில பேய் படங்களை அஞ்சாமல் தனியாகப்பார்த்தால் பரிசுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்புகளைக்கூட கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி அதி பயங்கரமான தத்ரூபமான காட்சி அமைப்புகளுடன் படங்கள் எடுக்கப்பட்டிருக்கும்.

Pei Padam Pei Padam

ஆனால் இன்று பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்னும் கூடுதல் பயங்கரங்களுடனும், அதிரும் ஒலி அமைப்புகளுடனும் படங்கள் வெளிவருகின்றன. புதிய தொழில்நுட்பங்களை டைனோசர், அவதார் போன்ற படைப்புகள் நம்மை வியக்க வைக்கின்றன. தமிழிலும் சமீபத்திய படங்கள் வந்துள்ளன. அதற்கு உதாரணம் 'எல்லாம் மேலே இருக்கிறவன் பாத்துக்குவான்' என்ற ஏலியன் தொடர்பான படத்தைக்கூறலாம்.


தமிழ் சினிமாவிலும் ஆங்கில படத்துக்கு இணையாக மட்டுமல்லாமல் சில படங்கள் அவர்களையும் மிஞ்சி எடுக்கப்படும் என்று நிரூபித்த திகில் படங்கள் உள்ளன. இந்த திகில் படங்களை பார்க்கும்பொழுது கண்டிப்பாக சிறியவர்கள் பார்க்கக்கூடாது. அந்த அளவுக்கு மிரட்டும் வகையில் இருக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் மொபைலில் ஹெட்போன் போட்டு இதைப்போன்ற படங்களை பார்க்கவே வேண்டாம்.

Pei Padam Pei Padam

அவ்வாறு தமிழில் வெளியான பேய் பட வரிசையை காண்போம் வாங்க.

மை டியர் லிசா:

1987ம் ஆண்டு வெளியான மை டியர் லிசா மலையாளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்தப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழ்ப் படம் போலவே இருந்ததால் வெற்றி பெற்றது. மை டியர் லிசா பேய்ப் படங்களின் உச்சம் என்று சொல்லும் அளவுக்கு மிக பயங்கரமான படமாக இருக்கும்.


ஜென்ம நட்சத்திரம்:

ஒரு குழந்தையும், குழந்தைக்கு துணையாக வரும் வேலைக்காரியும் செய்யும் பயங்கரம் தான் இப்படத்தின் கதைக்கரு. தி ஓமன் என்னும் ஆங்கிலப் படத்தின் தழுவல் ஆகும். கதாநாயகனின் மனைவிக்கு பிறக்கும் குழந்தை பிறந்து இறந்து விட்டதாக டாக்டர் தெரிவிக்கிறார். வேறு குழந்தையை அந்த பெண்ணிடம் கொடுக்கிறார்கள். அந்தக் குழந்தை தனது வளர்ப்பு பெற்றோர்களை அழித்து விட்டு புதிய உறவினர்களுடன் செல்கிறது. இந்த படத்தின் நுட்பமான மிரட்டும் காட்சிகள் ஆங்கில படத்துக்கு இணையாக இருக்கும்.

Pei Padam Pei Padam


13ம் நம்பர் வீடு:

ஒரு புது வீட்டிற்கு குடி வரும் அண்ணன், தம்பி கொண்ட குடும்பத்தினரை சுற்றி நடக்கும் கதை. முதலில் தாத்தா மர்மமான முறையில் இறக்கிறார். பின்னர் அண்ணன் இறக்கிறார். அந்த வீட்டில் திகிலூட்டும் சம்பவங்கள் நடக்கின்றன. அந்த வீட்டில் நடந்த பழைய சம்பவங்கள் அடிக்கடி தெரிகின்றன. அந்த குடும்பத்தின் முன்னோர்களில் ஒருவர் ஒரு பெண்ணின் சாவுக்கு காரணமாக இருக்கிறார். அந்த பெண் அனைத்து ஆண்களையும் பழி வாங்குவதாக சபதம் செய்து பலி வாங்குகிறாள். இதுவும் மிக பயங்கரமான பேய் படங்களில் ஒன்று.


வா அருகில் வா:

திகில் படம் பார்க்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த படம் ஒரு வரப்பிரசாதம். இக்கதையில் வரும் நாயகி வாழ்க்கையில் கெட்ட சக்தியினால் அவள் படும் இன்னல்களும், துன்பங்களும் திகிலோடும் சுவாஸ்யத்துடனும் சொல்லப்பட்டிருக்கிறது. தீய சக்தியினால் அவள் செய்யும் கொலைகள் அதிலிருந்து அவள் எப்படி மீண்டு வருகிறாள் என்பதை விளக்குகிறது. அவள் அந்த தீய சக்தியில் இருந்து வருகிறாளா இல்லையா என்பதை சொல்லும் படம்தான் வா அருகில் வா.

Pei Padam Pei Padam

உருவம்:

உருவம் படம் வயது வந்தோருக்கான திகில் திரைப்படம். இந்த படம் 1991ல் வெளிவந்தது. இதனை ஜி. எம். குமார் இயக்கினார். உருவம் படத்தில் மோகன், பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 15 மார்ச் 1991 இல் வெளிவந்தது.

அந்த காலகட்டத்தில் நடிகர் மோகன் இளம் பெண்களின் குறிப்பாக கல்லூரி மாணவிகளின் கனவு நாயகனாக இருந்தார். அவர் பேயாக நடித்து பெரும் பெயர் பெற்றதோடு படம் பார்ப்பவரின் குலை நடுங்கவைக்கும் படம். தனியாக பார்க்காதீங்க.

Pei Padam Pei Padam


நாளைய மனிதன்:

ஒரு அறிவியல் சோதனை நிகழ்த்தும் ஆராய்ச்சி மருத்துவர் தான் கண்டு பிடித்த மருந்தை ஒரு கொலைகாரன் மீது செலுத்துகிறார். பின்னர் அந்த கொலைகாரன் அழிக்கமுடியாத சக்தியாக வருகிறான். கொலைகாரன் பற்றிய ரகசியங்களை புலன்விசாரணை செய்யும் ஒரு போலீஸ்காரர் அவனது சக்தியை பற்றி உணர்கிறார். ஒரு பெரிய கிணறுக்குள் அவன் தள்ளப்பட்டு மூடப்படுகிறான். இத்துடன் இந்த படம் முடிகிறது.மீண்டும் இரண்டாம் பாகம் வந்தது. பிரபு நடித்திருக்கும் இந்த படமும் மிகவும் பயமுறுத்தியது.

அதிசய மனிதன்:

கௌதமி மற்றும் அவரது நண்பர்கள் ஒரு பங்களாவுக்கு வந்து தங்குகின்றனர். விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அழிக்க இயலாத மனிதன் சாவில் இருந்து உயிருடன் வந்து ஒருவர் பின் ஒருவராகக் கொலை செய்கிறான். பிசாசு போன்ற அந்த மனிதன் ஒவ்வொருவரையும் கொலை செய்யும் காட்சிகள் அதி பயங்கரம். சிறப்பு போலீஸ் அதிகாரியான நிழல்கள் ரவி ஒரு லேசர் துப்பாக்கி மூலம் எப்படி கொல்கிறார் என்பதே கதை.

இப்படியாக தமிழிலும் பேய் கதைகள் உருவாகி சக்கைபோடு போட்டுள்ளன. பேய்ப்படம் பார்த்திட்டு வந்து தயவு செய்து நான் சொல்லி இருக்கிறதை எல்லாம் பேய்க்கிட்ட சொல்லிடாதீங்க.

Updated On: 15 Oct 2023 5:40 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...