நித்யாமேனன் வீட்டில் சோகம்! அவரே பகிர்ந்த செய்தி!
நித்யா மேனன் தனது பாட்டியை இழந்துவிட்டதாக சோக செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
HIGHLIGHTS
நடிகை நித்யா மேனன் தனது வீட்டில் சோகம் நிகழ்ந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதனால் தான் மனமுடைந்து இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர்கள் சிலரே. அதில் முக்கியமானவர் நித்யா. இவர் மலையாள பின்னணியைக் கொண்டவராக இருந்தாலும் இவரது தமிழ் உச்சரிப்பு மிகவும் கியூட்டாக இருக்கும். நடிகை என்றால் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் நன்கு ஓடி ஆடத் தெரிந்திருக்க வேண்டும் என்பனவற்றை உடைத்தெறிந்துவிட்டு இவர் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு உண்மையானதாக இருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் மிகவும் கொண்டாடப்பட்டது. அதில் இவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. தனுஷ் ஜோடியாக இவர் கடைசியில் அனைவரையும் அழ வைக்கும் நடிப்பை வழங்கியிருப்பார். முன்னதாக மெர்சல், 24, காஞ்சனா 2, ஓ காதல் கண்மனி உள்ளிட்ட படங்களில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிப் படங்களிலும் அதிகம் நடித்திருக்கிறார். இவருக்கு பூர்வீகம் கேரளமாக இருந்தாலும், வசித்து வருவது பெங்களூரில்தான். இவர் தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நித்யா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சோகமான பதிவை வெளியிட்டுள்ளார். அது தனது வீட்டில் நிகழ்ந்த இறப்பு குறித்த பதிவாகும்.
நித்யா மேனனுக்கு தன் பாட்டி என்றால் உயிர். அவர்தான் பெரும்பாலும் நித்யாவை வளர்த்துள்ளார். இந்த நினைவுகளில் கவலை கொண்டுள்ள நித்யா, தனது பாட்டி இறந்த செய்தி குறித்து இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார். என்ட் ஆஃப் எரா என்றும் குட்பை பாட்டி, வேறொரு பக்கத்தில் உங்களைச் சந்திக்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.