/* */

nayanthara baby born-இரட்டைக்குழந்தை விவகாரம்- குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை : நயன்தாரா..!

nayanthara baby born-தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்த நயன்தாரா கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

HIGHLIGHTS

nayanthara baby born-இரட்டைக்குழந்தை விவகாரம்- குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை : நயன்தாரா..!
X

nayanthara baby born time-நயன்தாரா-விக்னேஷ் சிவன் குழந்தைகள்.(கோப்பு படம்)

nayanthara baby born-தமிழ் சினிமாவில் நயன்தாரா தனிப் பெயர் பெற்றவர். தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விஷயத்திற்கு இணையவாசிகள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பொதுவாக இது அவர்கள் விருப்பம் என்றே பெரும்பாலானோர் கூறுகிறார்கள்.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தமிழ் சினிமாவுக்கு இது புதிது என்றாலும் பாலிவுட் பிரபலங்கள் நிறைய பேர் இவ்வாறு வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டுள்ளனர். அதாவது குறிப்பாக கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வாடகைத்தாய் மூலமாகவே குழந்தை பெற்றுக்கொண்டார். இவர் திருமணத்திற்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்குப்பின் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். அதன் பின்பு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டார். சில நடிகைகள் குழந்தை பெற்றுக் கொண்டால் அழகு போய்விடும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

nayanthara baby born

ஆனால், இது குறித்து சன்னி லியோன் கூறும்போது வித்தியாசமான பதிலைக்கூறினார். எனக்கு குழந்தைகள் என்றால் அலாதிப் பிரியம் உண்டு. அதே சமயத்தில் என்னுடைய வேலையையும் நான் அதிகம் காதலிக்கிறேன். மேலும் குழந்தை பெற்றுக் கொண்டால் நான் ஒரு குழந்தையை மட்டும் தான் பெற முடியும். வாடகைத்தைமூலம் எனக்கு எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளமுடியும்.

ஆனால், இப்போது மூன்று குழந்தைகளுக்கு தாயாகியுள்ளேன் என்று சன்னி லியோன் குறிப்பிட்டிருந்தார் என்பதை இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும். அதே போல் தான் நயன்தாராவுக்கும் குழந்தைகள் மீது ஆசை உண்டு. ஆனால் தற்போது தன்னுடைய பட வேலைகளில் மிகவும் பிசியாக உள்ளார்.

nayanthara baby born

ஆகையால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதேபோல் அக்டோபர் ஒன்பதாம் தேதி இவர்கள் இருவருக்கும் இரட்டை ஆண் குழந்தை பிறந்து உள்ளது. ஒரு பக்கம் குழந்தைகள் ஆசை.மறு பக்கம் தொழில் என்று இரண்டையும் சிந்திக்கவேண்டியுள்ளது. அதனால் இவ்வாறு நயன்தாரா-விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார்.இதில் என்ன தவறு உள்ளது? என்கிறார்கள் ரசிகர்கள்.

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை பல ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். அவருக்கு தற்போதும் சினிமாவில் நல்ல டிமாண்ட் உள்ளது. அதனால் முடிக்கவேண்டிய படங்களை முடித்துவிட்டு. ஒருகுறிப்பிட்ட காலம் கிடைக்கும் படங்களை தொடர்ந்து நடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கலாம் என்றும் அவ்ருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

Updated On: 12 Oct 2022 5:23 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?