/* */

ஆறு ஆண்டுகளுக்கு முன்பே திருமணம்; நயன் - விக்கி விவகாரத்தில் திடீர் திருப்பம்

Nayanthara And Vignesh Shivan Registered Their Marriage Six Years Ago Before Wedding- இரட்டை குழந்தை விவகாரத்தில், நயன் - விக்கி திருமணம், ஆறு ஆண்டுகளுக்கு முன்பே நடந்துவிட்டதாக, புதிய தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

ஆறு ஆண்டுகளுக்கு முன்பே திருமணம்; நயன் - விக்கி விவகாரத்தில் திடீர் திருப்பம்
X

Nayanthara and Vignesh Shivan registered their marriage six years ago before wedding - வாடகைத்தாய் விவகாரத்தில் நயன்-விக்கி தந்த புது ‘ஷாக்’

Nayanthara and Vignesh Shivan registered their marriage six years ago before wedding- வாடகை தாய் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு நயன் - விக்னேஷ் சிவன் ஜோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் - நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர்.


நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை, சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் விக்னேஷ் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது 'ட்விட்டர்' பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "நயனும் நானும், அம்மா & அப்பாவாகி விட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து இரண்டு குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்," என பதிவிட்டிருந்தார்.


ஜூன் மாதம்தான் இருவருக்கும் திருமணமான சூழலில், அக்டோபர் மாதமே இவர்களுக்கு எப்படி குழந்தை பிறந்தது என பலரும் கேள்வி எழுப்பி பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டனர். இதனையடுத்து அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர் என கூறப்படுகிறது. அதேசமயம் நயனும், விக்கியும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதில் விதிகளை மீறினரா எனவும் கேள்வியும் எழுந்தது.

நிலைமை இப்படி இருக்க, இந்த விவகாரம் தொடர்பாக நயனிடமும், விக்னேஷ் சிவனிடமும் விளக்கம் கேட்கப்படும் என்று, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். மேலும், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்தான், குழந்தைகள் பிறந்திருக்கின்றன.


எனவே அங்கு பணி செய்யும் டாக்டர்களிடம் விசாரணை நடத்த தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்தது. அதன்படி மூன்றுபேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த வகையில், தற்போது தனிக்குழு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நயன் - விக்கி ஜோடி வாடகைத்தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, மருத்துவ விசாரணைக் குழுவிடம் நயன் - விக்கி முக்கிய ஆதாரங்களை சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி சல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியிருக்கிறது.


நயன் - விக்கி ஆகியோர் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, பதிவு திருமணம் செய்ததற்கான ஆதாரங்களையும், கடந்த டிசம்பர் மாதம் வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்களையும் அவர்கள் விசாரணைக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'அப்போ, திருமணம் என்ற மெயின் பிக்சர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே ஓடி விட்டது; நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்தது, ரிசப்ஷன் என்ற, டிரெய்லர்தானா? என்ன கொடுமை சார் இது?' என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 Oct 2022 4:04 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  4. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  5. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  9. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  10. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!