வாந்தி எடுத்த நயன்தாரா மருத்துவமனையில் அனுமதி; வதந்தியால் நொந்துபோன ரசிகர்கள்
நயன்தாரா வாந்தி எடுத்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அவர் கர்ப்பமாக உள்ளார் என பரவிய தகவல், கடைசியில் வதந்தி என்பதை அறிந்த அவரது ரசிகர்கள் நொந்து போயினர்.
HIGHLIGHTS
நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் ரிசார்ட் ஒன்றில் திருமணம் நடந்தது. இருவரும் தேனிலவுக்காக தாய்லாந்துக்கு சென்றனர். மீண்டும் தமிழகம் திரும்பிய இருவரும் தொடர்ந்து படப்பிடிப்புகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
நயன்தாரா திடீரென வாந்தி எடுத்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வேகமாக பரவியது. வாந்தியா, என்றால் கர்ப்பமாகி விட்டதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அது உண்மையில்லை என, பின்பு தெரிய வந்தது.
நயன்தாரா வாந்தியும் எடுக்கவில்லை, மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை. அவர் ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது கைவசம் நிறைய படங்கள் உள்ளதால், இப்போதைக்கு குழந்தை பெறும் ஐடியா எதுவும் இல்லையாம்.
நயன்தாரா வாந்தி எடுத்த தகவல், கடைசியில் வதந்தி என்பதை அறிந்த ரசிகர்கள், 'அட போங்கப்பா, மேரேஜ் தான் லேட்டா பண்ணுனாங்க, இனி இதுவுமா லேட்' என நொந்து போயிட்டாங்களாம்.