என் அண்ணன் சூர்யாவை வைத்து படம் பண்ணுவதே என் கனவு - நடிகர் கார்த்தி
அண்ணன் சூர்யாவை வைத்து, படம் டைரக்ட் செய்வேன் என்கிறார் அவரது தம்பி நடிகர் கார்த்தி.
HIGHLIGHTS
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த 'விருமன்' டிரெய்லர் வெளியானது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், இவர்களது கூட்டணியில் 'கொம்பன்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் பட தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் 'விருமன்' படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி நடித்துள்ளனர்.
'விருமன்' பட இசை வெளியீட்டு விழா, மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. விழாவில் படத்தின் டிரெய்லரும், பாடல்களும் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் நடிகர் சூர்யாவும், கார்த்தியும் ஒரே மேடையில் தோன்றியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
அப்போது நிருபர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, ஆயுத எழுத்து படம் முடிந்தவுடன், சூர்யா அண்ணனுக்கு ஒரு ஸ்கிரிப்ட் வைத்திருந்தேன். அது ஒரு பயோ பிக் திரைப்படம். அந்த படத்தை இயக்குவதுதான் எனது கனவு, என கூறினார்.
சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்பகால கட்டத்தில், 'ஆயுத எழுத்து' படத்தில் மணிரத்னத்தின் உதவி இயக்குனராக கார்த்தி பணியாற்றினார். சூர்யா, கார்த்தி இருவரும் லோகேஷ் கனகராஜின் 'கைதி 2' படத்தில் இணைந்து நடிக்கவுள்ள நிலையில், அண்ணன் சூர்யாவை வைத்து படம், டைரக்ட் செய்வேன் என கார்த்தி கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. நடிகரான கார்த்தி, இயக்குனராகி, அவரது அண்ணன் சூர்யாவை வைத்து படம் பண்ணுவதாக கூறியிருப்பது, கோலிவுட்டில் லேட்டஸ்ட் டாக் ஆக உள்ளது.