/* */

கமல் - மணிரத்னம் கூட்டணி; 35 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஜாம்பவான்கள்

Mani Ratnam And Kamal Haasan New Movie- 'நாயகன்' படத்துக்கு பிறகு, 35 ஆண்டுகள் கழித்து, கமல்ஹாசன், மணிரத்னம் மீண்டும் இணைகிறார்கள். மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில், கமல் நடிக்கிறார்.

HIGHLIGHTS

கமல் - மணிரத்னம் கூட்டணி; 35 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஜாம்பவான்கள்
X

mani ratnam and kamal haasan new movie,- மீண்டும் கரம் கோர்க்கும் கமல்ஹாசன் - மணிரத்னம்.

Mani Ratnam And Kamal Haasan New Movie- தமிழ் சினிமா வரலாற்றில், 35 ஆண்டுகளுக்குப்பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.


கடந்த 1987-ம் ஆண்டு, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த படம் 'நாயகன்'. மும்பை 'தாதா' குறித்து கதையான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பெரிய அளவில் 'ஹிட்' அடித்தது. இன்றளவும் 'நாயகன்' படம் குறித்து, ரசிகர்கள் சிலாகித்து பேசி வருகின்றனர்.


மும்பையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக பாடுபடும் 'வேலு நாயக்கர்' கேரக்டரில் கமல்ஹாசன் நடித்திருப்பார். ' நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா, எதுவுமே தப்பில்லை' என்ற கமலின் 'பஞ்ச்' வசனம், இன்றும் பிரபலம். இன்று அம்மா, அக்கா கேரக்டர்களில் அசத்தி கொண்டிருக்கும் சரண்யா பொன்வண்ணன், இந்த படத்தில்தான் அறிமுகமானார். நாசர், ஜனகராஜ், டெல்லி கணேஷ் கேரக்டர்களும், இந்த படத்தில் பேசப்பட்டது. 'நீங்க நல்லவரா, கெட்டவரா' என்று கமலிடம் கேட்கப்பட்ட வசனம், இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. 'நாயகன்' படத்தில் நடித்ததற்காக,கமல் தேசிய விருதுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான "பொன்னியின் செல்வன்'திரைப்படம் ரூ.500 கோடி வசூலித்து வெற்றி பெற்றுள்ளது. இதற்கான அடுத்த பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. அதேபோல கமலை பொறுத்தவரை அவரது 'விக்ரம்' திரைப்படம் வெற்றி பெற்று ரூ.450 கோடி வரை வசூலை வாரிக்குவித்துள்ளது. இந்நிலையில், 'நாயகன்'படத்திற்கு பிறகு கமலும் - மணிரத்னமும் இணைவார்களா? என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், 'நீண்ட காலத்துக்கு முன்பே, 'பொன்னியின் செல்வன்' படத்தை எடுக்க, நான் எடுக்கலாம் என திட்டமிட்டு இருந்தேன். அப்படி எடுத்தால், வந்தியத்தேவனாக, ரஜினியை நடிக்க வைக்கலாம் என, நடிகர் செவாலியே சிவாஜி சொல்லி இருந்தார். ஆனால், சந்தர்ப்ப சூழலால், அந்த படத்தை என்னால் எடுக்க முடியாமல்போய் தடைபட்டு விட்டது. தற்போது மணிரத்னம், அந்த படத்தை எடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார். அப்போதே, கமலும், மணிரத்னமும் இணைவார்களா, என்ற பேச்சு கோலிவுட்டில் ஆர்வமாக பேசப்பட்டது. தற்போது அது நிறைவேறி இருக்கிறது.

இதுதொடர்பாக, உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் தனது 'ட்விட்டர்' பக்கத்தில், 35 ஆண்டுகளுக்குப்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை கமலின் ராஜ்கமல் என்டர்டெயின்ட்மெண்ட், மெட்ராஸ் டாக்கீஸூடன் இணைந்து ரெட்ஜெயண்ட் மூவிஸூம் தயாரிக்கிறது. படம் 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என கூறப்படுகிறது. கமலின் பிறந்த நாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தது


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Nov 2022 8:56 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...