கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்
அதிமுக முன்னாள் அவைத்தலைவரும், கவிஞருமான புலவர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்
HIGHLIGHTS
கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் அவருக்கு வயது 85. 1935ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பிறந்த புலமைபித்தன் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்.
குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இடம்பெற்ற நான் யார் நீ யார் என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் புகழ் பெற தொடங்கிய புலமைப்பித்தன் எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார். விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான தெறி திரைப்படத்தில் புலமைப்பித்தன் பாடல் எழுதியுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலவர் புலமைப்பித்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.