உதவி இயக்குனரை தாக்கிய டிவி சீரியல் நடிகர் நவீன்
Kanda Naal Mudhal - உணவு இடைவேளைக்கு பிறகு, நடிப்பதற்காக அழைக்க சென்ற உதவி இயக்குனரை, தாக்கினார் சீரியல் நடிகர் நவீன். இதையடுத்து, படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
Kanda Naal Mudhal- கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 'இதயத்தை திருடாதே' என்ற தொடர் படுபிரபலமாக ஓடியது. இரண்டு பாகங்கள் வெற்றிகரமாக ஓடி, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நிறைவடைந்தது.
இந்த தொடர் மூலம், தமிழக மக்களிடம் பிரபலமானவர் நடிகர் நவீன். இவருக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணிக்கு அண்மையில் தான் திருமணம் முடிந்தது. அந்த வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் நிறைய வெளியாகின.
கண்ட நாள் முதல்
இபபோது நவீன் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் 'கண்ட நாள் முதல்' தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படப்பிடிப்பு தளத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நவீன் சூட்டிங் வரவில்லை. இதனால் உதவி இயக்குனர் குலசேகரன் நவீனை சென்று அழைத்திருக்கிறார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியை உதவி இயக்குனர் குலசேகரன் கண்ணத்தில் நவீன் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் சூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
பின் குலசேகரனுக்கு கண்ணுக்கு கீழ் இரத்தம் வந்து இருக்கிறது. இதனை அடுத்து அவருக்கு முதலுதவி தந்ததாகவும் கூறப்படுகிறது. சின்னத்திரை இயக்குனர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் குலசேகரன், நவீன் மீது புகார் அளித்திருக்கிறார். மேலும், மதுரவாயல் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. போலீஸ் இரண்டு தரப்பு வாதங்களையும் விசாரித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக சீரியலில் நடித்த நடிகர்களிடம் கேட்டபோது, கொஞ்ச நாளாகவே இந்த சீரியலில் நவீனுக்கு நடிக்க ஆர்வம் இல்லாதவர் போல் இருக்கிறார். அவர் அடித்ததற்கான காரணம் என்னவென்று எங்களுக்கும் தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்கள். இதன் மூலம் நவீன் சீரியலில் மீண்டும் நடிப்பாரா? இல்லை சீரியலை விட்டு விலகுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2